ஓய்வின்றி உழைப்போம்! ‘இந்தியா’ கூட்டணியை வெற்றிபெறச் செய்வோம்!

viduthalai
1 Min Read

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!

சென்னை, பிப்.21- தமிழ்நாடெங் கும் நாடாளுமன்ற தொகுதிகள் வாரியாக ‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ பொதுக் கூட் டங்கள் வெற்றிகரமாக நடைபெற் றுள்ளதையொட்டி, தி.மு.க. தலை வர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
“நாற்பதும் நமதே! நாடும் நமதே! என்பதை உறுதிசெய்யும் விதமாக மிக எழுச்சியோடு பிர மாண்டமாகத் தமிழ்நாடெங்கும் நடந்தேறியுள்ளன ‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ பொதுக் கூட்டங்கள்!
வெற்றிகரமாக இந்தக் கூட்டங் களை ஒருங்கிணைத்த மாவட்ட தி.மு.க. செயலாளர்கள் – தி.மு.க. முன்னணியினர் என அனை வர்க்கும் பாராட்டுகள்! நன்றி!
2024 நாடாளுமன்றத் தேர்தல் – வெற்றியை நோக்கிய நம் பயணத் தில் அடுத்த நூறு நாட்களும் மிக முக்கிய மானவை. கடமையுணர் வோடு ஓய்வின்றி உழைப்போம்; ‘இந்தியா’ கூட்டணியை வெற்றி பெறச் செய்வோம்!”
-இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *