தடகளப் போட்டி: தமிழ்நாட்டு வீரர்கள் சாதனை!

viduthalai
1 Min Read

மகாராட்டிரா மாநிலம் புனேவில் 44ஆவது தேசிய மூத்தோர் தடகள வாகையர் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. தேசிய அளவில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் கேரளா, கருநாடகா, தமிழ்நாடு, டில்லி, அரியானா, உத்திரப்பிரதேசம் என இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் 3000-க்கும் அதிகமான வீரர் – வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், தமிழ்நாடு சார்பாக கோவையில் இருந்து சுமார் 50-க்கும் மேற்பட்ட வீரர் – வீராங்கனைகள் கலந்து கொண்டனர். 45 வயதுக்கு அதிகமானோர் பிரிவில் கோவையை சேர்ந்த மோகன்குமார் 200 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்று அசத்தினார். மேலும், 400 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியிலும் தங்கம் வென்று அசத்தினார்.
இதே போல், 60-வயதிற்கு மேற்பட்டோர் பிரிவில் உயரம் தாண்டுதலில் பிரவீண் குமார் வெள்ளியும், 40 வயதுக்கு உள்பட்ட பிரிவில் வட்டு எறிதலில் சங்கீதா குமார் வெண்கலமும் வென்று அசத்தினார்.

இந்த நிலையில், கோவை திரும்பிய வெற்றியாளர் களை கோயமுத்தூர் தடகள சங்கத்தினர் உற்சாகமாக வரவேற்றனர். இதில் குழந்தைகள் மூத்த வீரர், வீராங் கனைக்கு ரோஜா பூக்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஓட்டப்பந்தய வீர்ர் மோகன் குமார், மூத்தோர் தடகள போட்டிகளை தமிழ்நாடு அரசு ஊக்குவிக்க வேண்டும் எனவும், குறிப்பாக இது போன்ற போட்டிகளுக்கு செல்லும் போது ரயில் பயணம் போன்ற செலவுகளுக்கு சலுகைகள் அறிவிக்க தமிழ்நாடு அரசு முன் வர வேண்டும் என்றும் வேண்டு கோள் விடுத்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *