“பா.ஜ.க.வுக்கு எதிரான முரண்பாடுகளைக் கைவிட்டுவிட்டால், அமலாக்கத்துறை (ED) சம்மன்கள் இல்லாமல் நிம்மதியாக இருக்கலாம். நீங்கள் பாஜக எதிர்ப்பைக் கைவிடுங்கள்” என்று சிவசேனா எம்.எல்.ஏ. பிரதாப் சன்னாயிக் அப்போதைய மராத்திய முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்குக் கடிதம் எழுதினார். பின்னர் சிவசேனா கட்சி உடைக்கப்பட்டு அஜித் பவார், சஞ்சய் ராவத் உள்ளிட்டோர் மீதான வழக்குகளை வைத் துக் கொண்டு ஆட்சி கவிழ்க்கப்பட்டது. அமலாக் கத்துறையை பாஜக தன் ஜனநாயக விரோதத்தை அமல்படுத்தப் பயன்படுத்துவது வெளிப்படையாகத் தெரியவில்லையா?