கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
5.10.2023
டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:
* எதிர்க்கட்சி ஆளும் மாநில தலைவர்கள் மீது ஒன்றிய அரசின் அமைப்புகளைக் கொண்டு மோடி அரசு தாக்குதல், கார்கே குற்றச்சாட்டு.
டெக்கான் கிரானிக்கல்,சென்னை:
* புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்குவது தொடர்பாக தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பினை உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
* தமிழ்நாடு பாஜ தலைவர் அண்ணாமலையின் 3ஆம் கட்ட பாதயாத்திரை மீண்டும் தள்ளி வைக்கப்பட்டு உள்ளதாக தமிழ்நாடு பாஜ தலைமை அறிவித்துள்ளது.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* நீதித்துறை சேவைகள் மற்றும் அரசு சட்டக் கல்லூரிகளில் உயர்ஜாதி அரிய வகை ஏழைகளுக்கு 10% இடஒதுக்கீடு – பீகார் அரசு அறிவிப்பு. பீகாரின் ஜாதிவாரி கணக்கெடுப்பின் முதல் தொகுப்பை அரசாங்கம் வெளியிட்ட ஒரு நாள் கழித்து இந்த அறிவிப்பு வந்துள்ளது.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகானும் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்த தங்கள் நிலைப்பாட்டை உடனடியாக தெளிவுபடுத்த வேண்டும் என்றும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் சுர்ஜேவாலா வலியுறுத்தியுள்ளார்.
* ஒடிசா மக்கள் தொகையில் 39.3 சதவீதம் பேர் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் என ஒடிசா அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கை.
தி இந்து:
* தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வின் (நீட்) கீழ் முதுகலை (பிஜி) சேர்க்கைக்கான தகுதி விதிமுறைகளை மாற்றியமைத்து, கட்-ஆப் குறைக்கப்பட்டது ஏன்? என மோடி அரசுக்கு காங்கிரஸ் கேள்வி
தி டெலிகிராப்:
* ஓபிசி பிரிவினருக்கான கிரிமிலேயர் வருமான உச்ச வரம்பை ஏன் மோடி அரசு உயர்த்தவில்லை என பிற்படுத்தப்பட்டோர் அமைப்புகள் கேள்வி.
* பாரத் ஜோடோ யாத்திரைக்குப் பிறகு, ராகுல் காந்தியின் மக்களால் நேசிக்கப்படுவதாகவும், வரும் காலத்தில் தேசத்திற்கு தலைமையை வழங்குவார் என்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்சிபி) தலைவர் சரத் பவார் நம்பிக்கை.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* ‘கிரீமி லேயர்’ வருமான வரம்பு விரைவில் உயர்த்தப்பட வாய்ப்பில்லை
* அய்.அய்.டி. மும்பை விடுதியில் மரக்கறி உணவுக்கு தனி மேசைக்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவர்கள் மீது நிர்வாகம் நடவடிக்கை; ஆசிரியர்கள் கண்டனம்.
– குடந்தை கருணா