ஏட்டுத் திக்குகளிலிருந்து…,

2 Min Read

 கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

5.10.2023

டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:

* எதிர்க்கட்சி ஆளும் மாநில தலைவர்கள் மீது ஒன்றிய அரசின் அமைப்புகளைக் கொண்டு மோடி அரசு தாக்குதல், கார்கே குற்றச்சாட்டு.

டெக்கான் கிரானிக்கல்,சென்னை:

* புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்குவது தொடர்பாக தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பினை உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

* தமிழ்நாடு பாஜ தலைவர் அண்ணாமலையின் 3ஆம் கட்ட பாதயாத்திரை மீண்டும் தள்ளி வைக்கப்பட்டு உள்ளதாக தமிழ்நாடு பாஜ தலைமை அறிவித்துள்ளது. 

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* நீதித்துறை சேவைகள் மற்றும் அரசு சட்டக் கல்லூரிகளில் உயர்ஜாதி அரிய வகை ஏழைகளுக்கு 10% இடஒதுக்கீடு – பீகார் அரசு அறிவிப்பு. பீகாரின் ஜாதிவாரி கணக்கெடுப்பின் முதல் தொகுப்பை அரசாங்கம் வெளியிட்ட ஒரு நாள் கழித்து இந்த அறிவிப்பு வந்துள்ளது.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகானும் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்த தங்கள் நிலைப்பாட்டை உடனடியாக தெளிவுபடுத்த வேண்டும் என்றும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் சுர்ஜேவாலா வலியுறுத்தியுள்ளார்.

* ஒடிசா மக்கள் தொகையில் 39.3 சதவீதம் பேர் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் என ஒடிசா அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கை.

தி இந்து:

* தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வின் (நீட்) கீழ் முதுகலை (பிஜி) சேர்க்கைக்கான தகுதி விதிமுறைகளை மாற்றியமைத்து, கட்-ஆப் குறைக்கப்பட்டது ஏன்? என  மோடி அரசுக்கு காங்கிரஸ்  கேள்வி

தி டெலிகிராப்:

* ஓபிசி பிரிவினருக்கான கிரிமிலேயர் வருமான உச்ச வரம்பை ஏன் மோடி அரசு உயர்த்தவில்லை என பிற்படுத்தப்பட்டோர் அமைப்புகள் கேள்வி.

* பாரத் ஜோடோ யாத்திரைக்குப் பிறகு, ராகுல் காந்தியின் மக்களால் நேசிக்கப்படுவதாகவும், வரும் காலத்தில் தேசத்திற்கு தலைமையை வழங்குவார் என்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்சிபி) தலைவர் சரத் பவார் நம்பிக்கை.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* ‘கிரீமி லேயர்’ வருமான வரம்பு விரைவில் உயர்த்தப்பட வாய்ப்பில்லை

* அய்.அய்.டி. மும்பை விடுதியில் மரக்கறி உணவுக்கு தனி மேசைக்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவர்கள் மீது நிர்வாகம் நடவடிக்கை; ஆசிரியர்கள் கண்டனம்.

– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *