பிரதமரை நோக்கி காங்கிரஸ் நான்கு கேள்விகள்

1 Min Read

புதுடில்லி, அக். 5- காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கை: 

கடந்த 5 மாதங்களுக்கு முன்னமே 3ஆம் தேதி மாலை மணிப்பூரில் கலவரம் மூண்டது. மாறாக, மோசமான நிலை என்பதில் இருந்து மிக மோசமான நிலைக்கு மணிப்பூர் மாநிலம் மாறியது. இந்நிலையில், பிரதமர் மோடிக்கு 4 கேள்விகளை முன்வைக்கிறோம்.

1. பிரதமர் மோடி கடைசியாக மணிப்பூர் மாநிலத்துக்கு எப்போது சென்றார்?

2. பிரதமர் மோடி கடைசியாக மணிப்பூர் முதலமைச் சரிடம் எப்போது பேசினார்?

3. மணிப்பூர் பாஜக சட்டமன்ற உறுப்பினர்களை பிரதமர் மோடி கடைசியாக எப்போது சந்தித்தார்?

4. மணிப்பூரைச் சேர்ந்த ஒன்றிய அமைச்சர்களிடம் பிரதமர் மோடி கடைசியாக இது குறித்து எப்போது ஆலோசனை நடத்தினார்? இவையே அந்தக் கேள்விகள். 

ஒரு மாநிலத்தையும் அதன் மக்களையும் ஒரு பிரதமர் முற்றாக கைவிட்டுவிட்டது இதுபோல இதற்கு முன்பு நடந்ததே இல்லை. சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க. மிகப் பெரிய பலத்துடன் ஆட்சிக்கு வந்த 15 மாதங்களில் மணிப்பூர் மிகமோசமான நிலைக்குதள்ளப்பட்டுவிட்டது. பா.ஜ.க.வின் மோசமான கொள்கைகளும் பிரதமர் மோடி யின் முன்னுரிமைகளுமே இதற்குக் காரணம். இவ்வாறு அறிக்கையில் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *