நீர் இல்லாமல் குறுவை சாகுபடி பாதிப்பு எக்டேருக்கு ரூ.13,500 இழப்பீடு வழங்கப்படும் முதலமைச்சர் அறிவிப்பு

Viduthalai
1 Min Read

சென்னை, அக்.6 காவிரி ஆற்றில் கருநாடக மாநிலத்திலிருந்து போதிய அளவு தண்ணீர் பெறப்படாததால், டெல்டா மாவட்டங்களில் குறுவை பயிர் சாகுபடியால் பாதிக்கப்பட்டுள்ள பயிர் பாதிப்பு விவரங்கள் முறையாக கணக்கிடப்பட்டு, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு எக்டேர் ஒன்றுக்கு ரூ.13,500 இழப்பீட்டுத் தொகையாக வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாட்டில் டெல்டா மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில், குறுவை சாகுபடி செய்வதற்கு ஏதுவாக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால், கடந்த 12-6-2023 அன்று மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து வைக்கப் பட்டது. 

ஆனால், காவிரி ஆற்றில் கருநாடக மாநிலத்திலிருந்து போதிய அளவு தண்ணீர் தொடர்ந்து பெறப்படாத காரணத்தால், மேட்டூர் அணையிலிருந்து விவசாயத்துக்கு போதிய அளவு தண்ணீர் திறந்துவிட இயலாத நிலையில், தற்போது டெல்டா மாவட்டங்களில் ஏறத்தாழ 40 ஆயிரம் ஏக்கர் பரப்பில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் வாடிய நிலையில் பாதிக்கப்பட் டுள்ளது. பயிர் பாதிப்பு விவரங்கள் முறையாக கணக்கிடப்பட்டு, பாதிக் கப்பட்ட விவசாயிகளுக்கு எக்டேர் ஒன்றுக்கு ரூ.13,500 இழப்பீடாக வழங்கிட தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *