ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நலவாரிய உறுப்பினர் அட்டைகள் வழங்கல்!

1 Min Read

சென்னை, அக். 6  ஈரோட்டில் இயங்கி வரும் சக்திதேவி அறக் கட்டளை சார்பில், மேனாள் தலைமைச் செய லர் முனைவர் வெ. இறையன்பு அய்.ஏ.எஸ்., அண்மையில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நலவா ரிய உறுப்பினர் அட்டைகளை வழங்கினார்.

இந்த அறக்கட்டளையின் அறங்காவலர்கள் முனைவர் பி.சி. துரைசாமி, முனைவர் சாந்தி துரைசாமி ஆகியோர் விழாவிற்கு முன்னிலை வகித்தனர். முனைவர் பி.சி. துரைசாமி அனை வரையும் வரவேற்று பேசி னார். ஈரோடு மாவட்ட ஆட்சியர்  ராஜகோபால் சுன்கரா இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தலைமையுரையாற்றினார். 

மேனாள் தலைமை செயலர் முனைவர் வெ. இறையன்பு அய்.ஏ.எஸ். சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, பயனாளிகளான 150 ஆட்டோ ஓட்டுநர் களைப் புதிதாகப் பதிவு செய்து நலவாரிய உறுப் பினர் அட்டை மற்றும் 2 செட் சீருடைகளையும் வழங்கினார்.

இந்நிகழ்வு ஈரோடு மாவட்ட தொழிலாளர் இணை ஆணையர் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்)  முருகேசன், விழாவில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். மேலும் சக்தி மருத்துவமனையின் மருத்துவர்கள் மற்றும் தன்வந்திரி மருத்துவ மனையின் மருத்துவப் பணியாளர்கள், ஆட் டோ ஓட்டுனர்கள், அவர்களின் குடும்பத்தா ருக்கு இலவச மருத்துவ ஆலோசனைகளை வழங்கினர்.  

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *