செம்பனார்கோயில் ஒன்றிய திராவிடர் கழகத் தலைவரும் பெரியார் பெருந்தொண்டருமான ஜி.கனகலிங்கம் 17-02-2024 அன்று மறைந்தார். அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு நேற்று (18-02-2024) மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் கடவாசல் குணசேகரன், மாவட்ட அமைப்பாளர் ஞான.வள்ளுவன், மாவட்ட துணைச் செயலாளர் அரங்க. நாகரத்தினம், மயிலாடுதுறை நகரத் தலைவர் சீனி. முத்து, நகரச் செயலாளர் பூ.சி. காமராஜ், செம்பனார்கோயில் ஒன்றியத் தலைவர் கவுதமன், சீர்காழி ஒன்றிய செயலாளர் செல்வம், கொள்ளிடம் ஒன்றியத் தலைவர் பாண்டியன், ஒன்றிய செயலாளர் பாண்டுரங்கன், குத்தாலம் ஒன்றிய செயலாளர் இளமாறன், மயிலாடுதுறை நகர இளைஞரணிச் செயலாளர் அறிவுடைநம்பி, பகுத்தறிவாளர் கழக ஜீவன்ராஜ் ஆகியோர் நேரில் சென்று இறுதி மரியாதை செலுத்தினர்.
பெரியார் பெருந்தொண்டர் கனகலிங்கம் மறைவு
1 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books