நார்வே எழுத்தாளருக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு

2 Min Read

அரசியல்

ஸ்டாக்ஹோம்,அக்.6 நார்வே நாட்டை சேர்ந்த எழுத்தாளர் ஜான் பாஸ் (64) இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப் பட்டு உள்ளார். 

மருத்துவம், இயற்பியல், வேதி யியல், இலக்கியம், அமைதி, பொரு ளாதாரம் ஆகிய 6 துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. கடந்த 2-ஆம் தேதி முதல்மருத்துவம், இயற்பியல், வேதியியல் ஆகிய வற்றுக்கான நோபல் பரிசுகள் அடுத்தடுத்த நாட்களில் அறிவிக் கப்பட்டன. இதைத்தொடர்ந்து நேற்று (5.10.2023) இலக்கியத் துக்கான நோபல் பரிசு நார்வே நாட்டை சேர்ந்த எழுத்தாளர் ஜான் பாஸுக்கு அறிவிக்கப்பட்டது. 

கடந்த 1959-ஆம் ஆண்டில் நார்வேநாட்டின் ஹாஜேசண்ட் பகுதியில் ஜான் பாஸ் பிறந்தார். 7 வயதில் மிகப்பெரிய விபத்தில் சிக்கி உயிர் தப்பினார். இந்த விபத்து அவரது வாழ்க்கையில் திருப்பு முனையை ஏற்படுத்தி பிற்காலத்தில் எழுத்தாளராக உருவெடுக்கச் செய்தது. கடந்த 1983ஆ-ம் ஆண்டில் அவரது முதல் நாவல் ரெட்- பிளாக் வெளியானது.

 இதைத் தொடர்ந்து நாவல், கவிதை, கட்டுரை, நாடகம் என 

70-க்கும் மேற்பட்ட படைப்புகளை அவர் உருவாக்கி உள்ளார். அவரது முக்கிய படைப்புகள் சுமார் 40-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு உள்ளன. 

டில்லி டெலிகிராப் நாளிதழ் வெளியிட்ட உலகின் 100 அறிவுஜீவிகளில் எழுத்தாளர் ஜான் பாஸ் 83-ஆவது இடத்தைப் பிடித்தார். அவருக்கு 2023-ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது. 

இதுதொடர்பாக சுவீடிஸ் அகாடமி வெளியிட்ட அறிக்கை யில், “மனித உணர்வுகளை தனது படைப்புகளின் மூலம் தத்ரூபமாக வெளிப்படுத்தியவர் ஜான் பாஸ். இதன்காரணமாக அவருக்கு இலக் கியத்துக்கான நோபல் பரிசு வழங் கப்பட உள்ளது” என்று கூறப்பட்டி ருக்கிறது. 

எழுத்தாளர் ஜான் பாஸ் கூறும் போது, “எனக்கு நோபல் பரிசு கிடைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இது எனக்கான விருது கிடையாது. இலக்கிய உலகத் துக்கான விருது” என்று தெரிவித்துள்ளார். 

இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரிட்டிஷ் எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு கிடைக்கும் என்று தகவல்கள் வெளியாகின. ஆனால் இந்த ஆண்டு அவருக்கு நோபல் பரிசு கிடைக்கவில்லை. இதுவரை 120 பேருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டிருக்கிறது. இதில் 17 பேர் மட்டுமே பெண்கள் ஆவர். இதுதொடர்பாகவும் தொடர்ந்து விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டு வருகின்றன. 

உலகம் முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் அமைதிக்கான நோபல் பரிசு இன்று (6.10.2023) வெளியிடப்பட உள்ளது. உக்ரைன் போர் உள்பட உலகின் பல்வேறு பகுதிகளில் போர் பதற்றம் நீடிக்கும் நிலையில் இந்த ஆண்டு அமைதிக் கான நோபல் பரிசு முக்கியத்துவம் பெற்றுள்ளது. வரும் 9-ஆம் தேதி பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட உள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *