3 விஞ்ஞானிகளுக்கு வேதியியல் நோபல் பரிசு

Viduthalai
1 Min Read

அரசியல்

ஸ்டாக்ஹோம்,அக்.6 வேதியியலுக்கான நோபல் பரிசுக்கு  அமெரிக்காவின் மவுங்கி பவெண்டி உள்பட மூவர் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

 இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் குறித்த அறிவிப்பு தொடங்கி மருத்துவத்துக்கான நோபல் பரிசு முதலில் அறிவிக்கப்பட்டது. பின்னர் இயற்பிய லுக்கான பரிசு  அறிவிக்கப்பட்டது. மூன்றாம் நாளான நேற்று முன்தினம் வேதியியலுக்கான பரிசு அறிவிக்கப் பட்டுள்ளது.

பிரான்சின் பாரிஸ் நகரில் பிறந்து அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப கல்லூரியில் பேரா சிரியராக பணியாற்றும் மவுங்கி பவெண்டி, அமெரிக் காவின் கிளவ்லேண்டு நகரில் பிறந்து நியூயார்க்கின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றும் லூயிஸ் புரூஸ், ரஷ்யாவில் பிறந்து அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள நானோ கிரிஸ்டல்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தின் மேனாள் தலைமை விஞ்ஞானியாக பணியாற்றிய அலெக்சி எகிமோவ் ஆகியோர் வேதியியலுக்கான நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

குவாண்டம் புள்ளிகளை கண்டறிந்து தொகுத் ததற்காக அவர்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப் பட்டுள்ளது. இவர்களது கண்டுபிடிப்புதான் எல்இடிக் களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவர்களுக்கு நோபல் பரிசுடன் ரூ. 8 கோடிக்கான ரொக்கம் பகிர்ந்தளிக்கப்படும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *