தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக திரு. செல்வப் பெருந்தகை நமது வாழ்த்துகள்

1 Min Read

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக திரு. செல்வப் பெருந்தகை அவர்களை அகில இந்திய காங்கிரஸ் தலைமை நியமித்திருப்பது மிகவும் பாராட்டத் தக்கதாகும்.
பல ஆண்டு அரசியல் பணி, சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைமை முதலிய அனுபவம் உள்ள சமூகநீதிப் போராளி யான அவருக்கு நமது வாழ்த்துகள்.
பல ஆண்டு அப்பொறுப்பில் இருந்து காங்கிரஸ் வெற்றிக்குக் காரணமாக அமைந்த பண்பாளர் திரு. கே.எஸ். அழகிரி அவர்களுக்கும் நமது வாழ்த்துகள்.
அதுபோல சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள குமரி மாவட்டம், கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ். ராஜேஷ்குமார் அவர்களுக்கும் நமது வாழ்த்துகள்.

கி.வீரமணி,
தலைவர்,
திராவிடர் கழகம்.

சென்னை 
18.2.2024 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *