தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக திரு. செல்வப் பெருந்தகை நமது வாழ்த்துகள்

viduthalai
1 Min Read

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக திரு. செல்வப் பெருந்தகை அவர்களை அகில இந்திய காங்கிரஸ் தலைமை நியமித்திருப்பது மிகவும் பாராட்டத் தக்கதாகும்.
பல ஆண்டு அரசியல் பணி, சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைமை முதலிய அனுபவம் உள்ள சமூகநீதிப் போராளி யான அவருக்கு நமது வாழ்த்துகள்.
பல ஆண்டு அப்பொறுப்பில் இருந்து காங்கிரஸ் வெற்றிக்குக் காரணமாக அமைந்த பண்பாளர் திரு. கே.எஸ். அழகிரி அவர்களுக்கும் நமது வாழ்த்துகள்.
அதுபோல சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள குமரி மாவட்டம், கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ். ராஜேஷ்குமார் அவர்களுக்கும் நமது வாழ்த்துகள்.

கி.வீரமணி,
தலைவர்,
திராவிடர் கழகம்.

சென்னை 
18.2.2024 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *