மைசூர் – ஆத்ம திருப்தி அறக்கட்டளையின் சார்பாக அதன் அறங்காவலர்கள் இன்று (18.2.2024) சென்னை பெரியார் திடலுக்கு வருகை தந்து திராவிடர் கழகத் தலைவர் மானமிகு ஆசிரியர் கி.வீரமணி அவர்களைச் சந்தித்தனர். அறக்கட்டளையினர்கருநாடக முதலமைச்சர் சித்தராமையா அவர்களைப்பற்றிய நூல் ஒன்றினை வெளியிட உள்ள நிலையில் அவருடன் பழகிய நிகழ்வுகள் குறித்து ஆசிரியர் அவர்களிடம் ஒரு வாழ்த்துச் செய்தியினை வேண்டினர். அறக்கட்டளையின் செயலாளர் பிரியதர்சினி, முனைவர் பி. மணி, சிவக்குமார், குருசுவாமி, ராபர்ட் பிண்டோ, அனுஷா, ராமலிங்கம் ஆகியோர் வந்திருந்தனர். வருகை தந்தோருக்கு தந்தை பெரியார் பற்றிய கன்னட மொழியில் வெளிவந்த புத்தகம் வழங்கப்பட்டது. அது சமயம் கழகப் பொருளாளர் வீ. குமரேசன், ஓசூர் கழக மாவட்டத் தலைவர் சு. வனவேந்தன் ஆகியோர் இருந்தனர்.பின்னர் மைசூர் அறக்கட்டளையின் நிர்வாகிகள் தந்தை பெரியார் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். பெரியார் பகுத்தறிவு ஆராய்ச்சி நூலகம், பெரியார் புத்தக நிலையம் மற்றும் பெரியார் திடலின் பிற பகுதிகளைச் சுற்றிப் பார்த்தனர்.
மைசூரிலுள்ள அறக்கட்டளையினர் திராவிடர் கழகத் தலைவருடன் சந்திப்பு
1 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books