மைசூரிலுள்ள அறக்கட்டளையினர் திராவிடர் கழகத் தலைவருடன் சந்திப்பு

viduthalai
1 Min Read

மைசூர் – ஆத்ம திருப்தி அறக்கட்டளையின் சார்பாக அதன் அறங்காவலர்கள் இன்று (18.2.2024) சென்னை பெரியார் திடலுக்கு வருகை தந்து திராவிடர் கழகத் தலைவர் மானமிகு ஆசிரியர் கி.வீரமணி அவர்களைச் சந்தித்தனர். அறக்கட்டளையினர்கருநாடக முதலமைச்சர் சித்தராமையா அவர்களைப்பற்றிய நூல் ஒன்றினை வெளியிட உள்ள நிலையில் அவருடன் பழகிய நிகழ்வுகள் குறித்து ஆசிரியர் அவர்களிடம் ஒரு வாழ்த்துச் செய்தியினை வேண்டினர். அறக்கட்டளையின் செயலாளர் பிரியதர்சினி, முனைவர் பி. மணி, சிவக்குமார், குருசுவாமி, ராபர்ட் பிண்டோ, அனுஷா, ராமலிங்கம் ஆகியோர் வந்திருந்தனர். வருகை தந்தோருக்கு தந்தை பெரியார் பற்றிய கன்னட மொழியில் வெளிவந்த புத்தகம் வழங்கப்பட்டது. அது சமயம் கழகப் பொருளாளர் வீ. குமரேசன், ஓசூர் கழக மாவட்டத் தலைவர் சு. வனவேந்தன் ஆகியோர் இருந்தனர்.பின்னர் மைசூர் அறக்கட்டளையின் நிர்வாகிகள் தந்தை பெரியார் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். பெரியார் பகுத்தறிவு ஆராய்ச்சி நூலகம், பெரியார் புத்தக நிலையம் மற்றும் பெரியார் திடலின் பிற பகுதிகளைச் சுற்றிப் பார்த்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *