இலங்கை அரசின் விபரீத விளையாட்டு

viduthalai
2 Min Read

இலங்கை அரசின் விபரீத விளையாட்டு
தமிழ்நாட்டு மீனவர்கள்
23 பேருக்கு சிறைத் தண்டனையாம்!

ராமேசுவரம், பிப்.18– கட லில் மீன்பிடித்தபோது இலங்கை கடற்படையின ரால் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்கள் 23 பேருக்கு சிறைத்தண்டனை விதித்து இலங்கை நீதிமன்றம் அதிர்ச்சித் தீர்ப்பளித்தது. இதில் 3பேரை உடனடியாக சிறையில் அடைக்கவும் உத் தரவிட்டது.
ராமேசுவரத்தில் இருந்து கடந்த பிப். 4ஆம் தேதி 23 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க 2 விசைப் படகுகளில் சென்றனர். எல்லை தாண் டிச்சென்று மீன் பிடித்ததாக அவர்களை இலங்கை கடற் படையினர் நடுக்கடலில் கைது செய்தனர். பின்னர் அவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்ட னர். இந்நிலையில் 23 மீன வர்கள் 16.2.2024 அன்று ஊர்க்காவல் துறை நீதிமன் றத்தில் ஆஜர்படுத்தப்பட் டனர்.
அப்போது, மேற்கண்ட 2 படகுகளின் ஓட்டுநர்க ளான தங்கச்சிமடத்தை சேர்ந்த ராபர்ட், பெக்கர் ஆகியோருக்கு தலா 6 மாதம் சிறைத்தண்டனை விதிக்கப் பட்டது.
இதேபோல்,மெல்சன் என்ற மீனவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து, இந்த 3 பேரையும் சிறையில் அடைக்க நீதிபதி கஜநிதி பாலன் உத்தரவிட்டார்.
இதில் மெல்சன், எல்லை தாண்டி 2ஆவது முறையாக வந்து மீன் பிடித்ததால் கைது செய்யப்பட்டு இருப்ப தால் தண்டனை விதிக்கப் பட்டு இருப்பதாகவும் நீதி பதி தெரிவித்தார்.
உறவினர்கள் அதிர்ச்சி
மேலும் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், “மற்ற 20 மீனவர் களுக்கும் தலா 1 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப் படுகிறது. இந்த தண்டனை 5 ஆண்டுக்கு நிறுத்தி வைக் கப் படுகிறது. இடைப்பட்ட காலத்தில் இந்த 20 மீன வர்கள் கடலில் மீண்டும் எல்லை தாண்டி மீன்பிடித்த தாக, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட் டால், உடனடியாக ஒன்றரை ஆண்டு சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும்.
தற்போது அவர்கள் விடு விக்கப்படுகிறார்கள்” என் றும் நிபந்தனையை விதித் துள்ளார்.
3 மீனவர்களுக்கு தண் டனை விதித்து சிறையில் அடைத்தது, மற்ற மீனவர் களுக்கு தண்டனை விதித்து நிபந்தனையுடன் விடுவித்த தும் ராமேசுவரம் மீனவர்கள், உறவினர்கள் மத்தியில் அதிர்ச் சியை ஏற்படுத்தி உள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *