கடவுள் சக்தி எங்கே?

viduthalai
1 Min Read

கடவுள் சக்தி எங்கே?
அம்பத்தூர் அருகே
3 கோவில்களில் திருட்டு

அம்பத்தூர், பிப்.18- அம்பத்தூர் அடுத்த சூரப்பட்டு மேட்டூர் பகுதியில் உள்ள சீனிவாச பெருமாள் கோவிலுக்குள் புகுந்த அடை யாளம் தெரியாத நபர்கள், உற்சவர் சிலையில் அணிவிக்கப்பட்டிருந்த 2 கிராம் தங்க நகையை திருடிச்சென்று விட்டனர்.
அதே பகுதியில் உள்ள எல்லையம்மன் கோவில் மற்றும் சூரப்பட்டு எழில் நகரில் உள்ள விநாயகர் கோவிலின் உண்டியலையும் அடையாளம் தெரியாத நபர்கள் உடைத்து அதில் இருந்த காணிக்கை பணத்தை அள்ளிச் சென்றுள்ளனர்.
ஒரே நாள் இரவில் சூரப்பட்டு பகுதியில் 3 கோவில்களில் நடைபெற்ற திருட்டு நிகழ்வு தொடர்பாக அம்பத்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைரேகைகளை வைத் தும், கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளை வைத்தும் அடையாளம் தெரி யாத நபர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *