கம்யூனிஸ்ட் கட்சி: தேர்தல் பத்திரம் மூலம் ஒரு ரூபாயும் பெற்றதில்லை!

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

 

இரா.முத்தரசன் அறிக்கை

சென்னை,பிப்.18- இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு,
பாஜக ஒன்றிய அரசு பன் னாட்டு கார்ப்பரேட்டு நிறுவனங் களோடு இணைந்து செயல்படும் தனது கூட்டுக் களவாணி செயலை மறைத்துக் கொள்ள தேர்தல் பத்திரம் திட்டத்தை வெளியிட்டது. இத்திட்டம் செயல்பட்ட கடந்த அய்ந்தாண்டுகளில் தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக அதிகம் நிதி பெற்றிருப்பது உச்சநீதிமன்ற விசாரணையில் வெளியாகியுள் ளது. தேர்தல் பத்திரங்கள் மூலம் கார்ப்பரேட் நிறுவனங்கள் வழங் கிய நிதியில் 90 சதவீதத்துக்கும் அதிகமாக பாஜக பெற்றிருப்பதை யும் செய்திகள் உறுதி செய்கின்றன.

வெளிப்படைத்தன்மை இல் லாத, வாக்காளர்களின் உரிமையை மறுக்கும், நியாயமான, சுதந்திர மான தேர்தல் நடைமுறைகளுக்கு எதிரான தேர்தல் பத்திரம் திட்டம் செல்லாது என உச்சநீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு வழங் கியுள்ளது. இந்த தீர்ப்பில் தேர்தல் பத்திரங்கள் மூலம் இதுவரை எந் தெந்த கட்சிகள், எந்தெந்த நிறுவனங் களிடம் நிதி பெற்றுள்ளனர் என்ற விவரத்தை தேர்தல் ஆணையம் மார்ச் 13 ஆம் தேதிக்குள் தனது இணைய வலை தளத்தில் பதிவிட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் தேர்தல் பத் திரங்கள் மூலம் நிதி பெற்றுள்ள விவரங்கள் என்ற தலைப்பில் செய்திகள் வெளியாகியுள்ளன. இதில் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற் றுள்ள நிதி என்று வெளியாகி இருப்பது சரியல்ல. அது முற்றிலும் தவறான தகவலாகும் இது தொடர் பாக தேர்தல் ஆணையம் கேள்வி எழுப்பிய நேரத்தில் இந்தியக் கம்யூ னிஸ்ட் கட்சி “தேர்தல் பத்திரங்கள் மூலம் எந்தவித நிதியும் பெற வில்லை” என்பதை திட்டவட்ட மாகவும் வெளிப்படையாகவும் கடிதம் எழுதியுள்ளது என்பதை அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறோம்.

-இவ்வாறு இரா.முத்தரசன் அறிக் கையில் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *