தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி பெற்றதாக அவதூறு பரப்புவதா?

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சில ஊடகங்களின் தவறான செய்திக்கு சிபிஅய்(எம்) மறுப்பு!

சென்னை, பிப். 17- இந்திய கம் யூனிஸ்ட் கட்சி (மார்க் சிஸ்ட்) தமிழ்நாடு மாநில செயலாளர் கே.பால கிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளதாவது,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), தேர்தல் பத்திரம் மூலம் அரசியல் கட்சிகள் நிதி பெறும் திட்டத்தை துவக் கம் முதலே கடுமையாக எதிர்த்து வந்தது. அந்த திட்டத்தின் மூலம் ஒரு பைசா கூட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிதி பெறவில்லை. அதற்கான சிறப்பு வங்கிக் கணக்கை யும் துவக்கவில்லை. அந்த திட்டத்தை எதிர்த்து நீதிமன்றம் சென்று அந்த திட்டத்தை ரத்து செய்ய வைத்திருப்பது மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.
இந்நிலையில், தேர்தல் பத்திர திட்டம் மூலம் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியும் நிதி பெற்றதாக சில ஊடகங் கள் செய்தி வெளியிட் டுள்ளன. இது முற்றிலும் தவறானது, ஆதாரமற் றது மட்டுமின்றி உண் மைக்கும் புறம்பானது. இது மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியை திட்ட மிட்டு களங்கப் படுத்துவ தற்கான உள்நோக்கம் கொண்டதாகும்.
எனவே, தவறான செய்தி வெளியிட்ட ஊடகங்கள் மறுப்பு செய்தி – திருத்தம் வெளியிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலி யுறுத்துகிறது; இல்லை யேல் சட்டப்படி உரிய நடவடிக்கை மேற்கொள் ளப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறது.
இவ்வாறு கே.பால கிருஷ்ணன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *