6.10.2023
டெக்கான் கிரானிக்கல்,சென்னை:
👉தமிழ்நாட்டில் கோயில்களை அரசு அபகரித்து வைத்துள்ளதாக பிரதமர் மோடி பேசியதற்கு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். எல்லாருக்கும் எல்லாம் என்பதுதான் எங்கள் ஆட்சி, பிரதமரின் பார்வையில் தவறு இருக்கிறது.
தி இந்து:
👉காங்கிரஸ் செயற்குழு அக்டோபர் 9 ஆம் தேதி தலைநகரில் கூடி, பீகார் ஜாதிவாரி கணக்கெடுப்பின் முடிவுகள் மற்றும் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்கள் உட்பட தற்போதைய அரசியல் முன்னேற்றங்கள் குறித்து விவாதிக்கும் என தகவல்.
தி டெலிகிராப்:
👉மண்டல் அரசியலின் மறுமலர்ச்சியை பாரதிய ஜனதா விரும்பவில்லை. ஆனால், ஜாதிவாரிக் கணக் கெடுப்பை எதிர்ப்பதன் மூலம், சரியான கொள்கையைப் பயன்படுத்த எதிர்க்கட்சிகளுக்கு மோடி அரசு வாய்ப் பளித்துள்ளது என்கிறது தலையங்க செய்தி.
– குடந்தை கருணா