சிதம்பரத்தில் ரயில் மறியல் போராட்ட அறிவிப்பைத் தொடர்ந்து தொல்.திருமாவளவன் எம்.பி., தலைமையிலான போராட்டக் குழுவினருடன் ரயில்வே அதிகாரிகள் பேச்சுவார்த்தை

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சிதம்பரம், பிப்.17 கோவை சதாப்தி விரைவு மற்றும் மைசூர் விரைவு ரயிலை கடலூர் வரையிலும் நீட்டிக்கக் கோரி, சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பி னர் எழுச்சித் தமிழர் தொல்.திருமா வளவன் தலைமையில் 14.2.2024 அன்று சிதம்பரம் ரயில் நிலையில் ரயில் மறி யல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
சார் ஆட்சியர் தலைமையில் நடை பெற்ற அமைதிக் கூட்டத்தில் தென் மண்டல ரயில்வே தலைமை அதி காரியிடம் நேற்று (16.2.2024) திருச்சியில் எழுச்சித் தமிழர் திருமாவளவனும், விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமாரும், சிதம்பரம் தொகுதி ‘இந்தியா’ கூட்டணி கட்சிகளின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் வர்த்தக சங்கம், பல்வேறு இயக்கத் தோழர்கள் ரயில்வே அதிகாரிகளிடம் கோரிக்கை மனுவினை அளித்தனர்.
அதை உடனடியாக பரிசீலனை செய்வதாகவும், விரைந்து நடவடிக்கை எடுப்பதாகவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதில் விசிக மாவட்ட செயலாளர் அரங்க தமிழ்ஒலி..சி.பி.எம். லால்புரம் தலைவர் வி.எம்.சேகர், தா.வ.க. மாவட்ட செயலாளர் சேரலாதன், திராவிடர் கழக மாவட்ட செயலாளர் அன்பு.சித்தார்த்தன், சிபிஎம் சிதம்பரம் நகராட்சி துணைத் தலைவர் முத்து, வி.சி.க. நகர செயலாளர் ஆதிமூலம் மற்றும் காட்டுமன்னை, பரங்கிப்பேட் டைத் தோழர்கள் கலந்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து- ரயில்வே அதி காரிகள் பேச்சுவார்த்தைக்கு அழைத்த தால், போராட்டம் கைவிடப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *