நைனார்குப்பத்தில் பொங்கல் விழா

1 Min Read

நைனார்குப்பம், பிப்.17-செங்கல்பட்டு மாவட் டம் செய்யூர் அடுத்த நைனார்குப்பம் கிராமத் தில் கழகத் தோழர்கள் ரமேஷ், பழனிபாரதி ஆகியோர் கிராம மக்கள் ஒத்துழைப்புடன் 18ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டு பொங்கல் விழா சிறப்பு டன் நடத்தினர்.
15.1.2024 அன்று காலை 10 முதல் விளை யாட்டு போட்டிகள், 3 மணிக்கு பள்ளி மாணவர் களின் கலை நிகழ்ச்சிகள், மாலை 6 மணிக்கு திருப் போரூர் புதுவினை கலை ஞர்களின் பறையிசை மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடந்தன இரவு 7 மணிக்கு செங்கல்பட்டு மாவட்ட கழகத் தலைவர் செங்கை சுந்தரம் தலைமையில், லத்தூர் ஒன்றிய தலைவர் பெரியார்வாசன், செய்யூர் நகர தலைவர் வினோத் ஆகியோர் முன் னிலையில் சினிமா புகழ் திண்டுக்கல் ஈட்டி கணே சன் அவர்களின் மந்தி ரமா? தந்திரமா? நிகழ்ச் சியை கிராம் மக்கள் அனைவரும் கண்டு சிந் தித்து விழிப்புணர்வு பெற்றனர்.
தொடர்ந்து சிறப்பு விருந்தினர்கள் வெற்றி பெற்ற அனை வருக்கும் பரிசுகள் வழங்கி னர். காலை முதல் இரவு 10 மணிவரை கிராம பொதுமக்களும், அனைத் துக் கட்சித் தோழர்களும் நிகழ்ச்சிகளை கண்டு களித்தனர்,

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *