நைனார்குப்பம், பிப்.17-செங்கல்பட்டு மாவட் டம் செய்யூர் அடுத்த நைனார்குப்பம் கிராமத் தில் கழகத் தோழர்கள் ரமேஷ், பழனிபாரதி ஆகியோர் கிராம மக்கள் ஒத்துழைப்புடன் 18ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டு பொங்கல் விழா சிறப்பு டன் நடத்தினர்.
15.1.2024 அன்று காலை 10 முதல் விளை யாட்டு போட்டிகள், 3 மணிக்கு பள்ளி மாணவர் களின் கலை நிகழ்ச்சிகள், மாலை 6 மணிக்கு திருப் போரூர் புதுவினை கலை ஞர்களின் பறையிசை மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடந்தன இரவு 7 மணிக்கு செங்கல்பட்டு மாவட்ட கழகத் தலைவர் செங்கை சுந்தரம் தலைமையில், லத்தூர் ஒன்றிய தலைவர் பெரியார்வாசன், செய்யூர் நகர தலைவர் வினோத் ஆகியோர் முன் னிலையில் சினிமா புகழ் திண்டுக்கல் ஈட்டி கணே சன் அவர்களின் மந்தி ரமா? தந்திரமா? நிகழ்ச் சியை கிராம் மக்கள் அனைவரும் கண்டு சிந் தித்து விழிப்புணர்வு பெற்றனர்.
தொடர்ந்து சிறப்பு விருந்தினர்கள் வெற்றி பெற்ற அனை வருக்கும் பரிசுகள் வழங்கி னர். காலை முதல் இரவு 10 மணிவரை கிராம பொதுமக்களும், அனைத் துக் கட்சித் தோழர்களும் நிகழ்ச்சிகளை கண்டு களித்தனர்,
நைனார்குப்பத்தில் பொங்கல் விழா
Leave a comment