சி.ஏ.ஜி. அறிக்கையின்படி ரூ.28 கோடி மோசடி பரனூர் சுங்கச்சாவடி மீது

viduthalai
1 Min Read

லாரி உரிமையாளர்கள் காவல்துறையில் புகார்

செங்கல்பட்டு,பிப்.16- செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடியின் ஒப்பந்தம் கடந்த 2019ஆம் ஆண்டே முடிந்து விட்டது. ஆனால் கடந்த அய்ந்து ஆண்டுகளாக பரனூர் சுங்கச்சாவடியில் தொடர்ந்து கட்டணம் வசூலிக்கப்படுவதாக லாரி உரிமையாளர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடி 2019ஆம் ஆண்டே காலாவதியாகிவிட்டது. சி.ஏ.ஜி.யின் அறிக்கையின்படி, ரூ.28 கோடி மோசடி செய்யப்பட்டிருப்ப தாகவும், 62 லட்சத்து 33 ஆயிரம் வாகனங்கள் இலவசமாகச் சென்றதாகவும் குறிப்பிட்டு, அதற்குரியப் பணத்தையும் கையாடல் செய்து பொய்யான அறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
எனவே பரனூர் சுங்கச்சாவடி மீது 420 பிரிவின் கீழ் மோசடி வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பினர், செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். காலாவதியான பின்னரும் கடந்த 5 ஆண்டுகளாக சுங்கச்சாவடியில் பொதுமக்களிடம் பணம் வசூலிக்கிறார்கள்..

இந்த பரனூர் சுங்கச்சாவடியில் தேசிய நெடுஞ்சாலை விதிகளின் படி, கழிவறை, மின்விளக்கு உள்பட அடிப்படை வசதிகள் இல்லை. இங்கு பெரிய அளவில் கையாடல் நடந்திருப்பதாகவும் புகாரில் குற்றம்சாட்டி உள்ளனர்.
எனவே சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்கும் அனைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளனர். முன்னதாக கடந்த 4 நாட்களுக்கு முன்பு தான் லாரி உரிமையாளர்கள் உள்பட பலர் பரனூர் சுங்கச்சாவடிக்கு எதிராக பெரிய அளவில் போராட்டமும் நடத்தி, அதனை உடனே அகற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியை மூடுவது குறித்து இதுவரை எந்த முடிவையும் ஒன்றிய அரசு எடுக்கவில்லை.. காவல்துறையில் அளிக்கப்பட்ட புகார் காரணமாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டிலேயே தமிழ்நாட்டில் தான் ஏராளமான சுங்கச்சவாடிகள் இருக்கிறது என்ற குற்றச்சாட்டு உள்ளது. அண்மையில் மதுரை நத்தம் சாலை சுங்கச்சாவடியில் அதிக கட்டணம் வசூலிப்பதற்கு எதிராக வாகன ஓட்டிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *