தேர்தல் நாள் அடுக்க அடுக்க, திரு. சத்தியமூர்த்தியின் பைத்தியமும் முற்றி வருகிறது. வெறி பிடித்தவர் போல் உளறிக் கொட்டுகிறார். நரம்பில்லா நாக்கினால் நாற்ற வார்த்தைகளை வாரி வீசுகிறார். மந்திரி பதவிக் கிறுக்கினால், மரியாதையான வார்த் தைகளைக் கூட அவருக்கு உச்சரிக்க முடிய வில்லை. வேலூர்ப் பிரசங்கம் வெறி பிடித்த வன் புலம்பல் மாதிரியாகவே இருக்கிறது. நாவடக்க மென்பது ஒரு சிறிதுமில்லாத ஓர் ஆசாமியைத் தலைவராகக் கொண்ட ஒரு ஸ்தாபனத்தை கண்ணியமுடையவர்கள் மதிப்பார்களா? ஒரு ஸ்தாபனத்துக்கு ஏற் படக்கூடிய பெருமையெல்லாம் ஆளினா லேயே. எனவே, சந்திக் கூத்தாடும் சண்டிக ளைத் தலைவராகக் கொண்ட எந்த ஸ்தா பனமும் பொதுஜன மதிப்பைப் பெறாது.
ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்களை ‘ஷிகண் டி’கள் என்றும், கொலை பாதகர் என்றும் கூறும் ஒருவர், ஒன்றில், பைத்தியக்காரனாக இருக்க வேண்டும்; அல்லது மேதை மரியாதையறியா பட்டிக்காட்டானாயிருக்க வேண்டும்.
“இங்கிலீஷ்காராவது சுடுவதற்குத் தயங்கு வார்கள். ஆனால் ஜஸ்டிஸ் கட்சி மந்திரிகளோ இரக்கமின்றிச் சுட்டுவீழ்த்தி விடுவார்கள். ஜஸ்டிஸ் மந்திரிகளைவிட இங்கிலீஷ்காரர் மிக்க மனிதத் தன்மையுடையவர்கள்’’ என ஒரு மனிதன் பட்டப் பகலிலே ஒரு பொதுக் கூட்டத்திலே துணிந்து பேசுவானானால், அவனது மூளை எவ்வளவு தூரம் அழுகிப் புழுத்திருக்க வேண்டுமென்பதை வாசகர் களே ஊகித்தறிந்து கொள்ளட்டும். மற்றும், ‘மீண்டும் ஜஸ்டிஸ் மந்திரிகள் பதவி வகிக்கும் படி நேர்ந்தால் ஏமாந்து தற்கொலை செய்து கொள்ளுவதாக’ திரு.சத்தியமூர்த்தி பய முறுத்துகிறார். இம்மாதிரி புலம்பும் ஆசாமி கள் பொது வாழ்வுக்கு லாயக்குடையவர்களா என்பதையும் தென்னாட்டு மக்களே நிர்ண யம் செய்து கொள்ளட்டும். தேர்தல் காலங் களிலே ஒரு கட்சியார் மற்ற கட்சியாரைத் தாக்கிப் பேசுவது இயல்புதான். ஆனால், அந்தத் தாக்குதலுக்கும் ஓர் எல்லையுண்டு. பைத்தியக்காரன் மாதிரி கன்னா பின்னா வெனக் கத்துவதை எந்த யோக்கியப் பொறுப் புள்ள சமூகமும் ஆதரிக்காது. அம்மாதிரி புலம்பும் கிறுக்கர்கள் அரசியல் வாழ்வுக்கு லாயக்குடையவர்களுமல்லர்.
அயோக்கிய சிகாமணியான ‘தின மணி’யோ சாக்கடைக் கந்தலாக மாறி வருகிறது. ஜஸ்டிஸ் கட்சி மீது ‘தினமணி’க்கு இருந்துவரும் அசட்டு மனப்பான்மையைத் தென்னாட்டார் நன்கறிவர். ஜஸ்டிஸ் கட்சி யைத் தூற்றுவதையே தன் பிறவி லட்சியமாக அது கொண்டிருக்கிறது. காங்கிரசுக்கு, ஹனு மாரைப் போல் மலைகளைத் தகர்த்தெறியும் சக்தியும், அகஸ்தியரைப் போல் கடலை வற்ற வைக்கும் சக்தியும் உண்டாம். 1934க்குப் பின் நடந்த காங்கிரஸ் தேர்தலிலும் அந்த உண் மையை காங்கிரஸ் நிரூபித்து வருகிறதாம். அப்படியிருந்தும் ஒவ்வொரு தேர்தலிலும் புதிது புதிதான மூடர்கள் காங்கிரஸை எதிர்க் கப் புறப்பட்டு அவமானமடைந்து வருகிறார் களாம். இவ்வாறெல்லாம் புலம்புகிறது. காங் கிரஸை எதிர்ப்பவர்களெல்லாம் மூடர்கள் எனக் கூறுவோர் அசல் போக்கிரிகளாகத்தான் இருக்க வேண்டும். திருச்சியிலும், வேலூரி லும், ஆந்திர தேசத்தில் பல இடங்களிலும் சமீபத்தில் காங்கிரசுக்கு முழுத் தோல்வி ஏற்பட்டதை அயோக்கிய ‘தினமணி’ அறி யவில்லையா? வாஸ்தவத்தில் காங்கிரசுக்கு ஹனுமார் சக்தியும், அகஸ்தியர் சக்தியு மிருக் குமானால் மற்றக் கட்சிகளுக்குத் ‘தினமணி’ ஏன் பயப்படவேண்டும்? “ஜஸ்டிஸ் கட்சியே! ஜனநாயகக் கட்சியே! உங்களைப் பார்த்து நான் பயப்படவில்லை. நீங்கள் எல்லாம் கொசுக்கள். காங்கிரசை எதிர்க்கத் தாராளமாக முன் வாருங்கள் ஒரு கை பார்த்துவிடலாம்’’ என்றுத் தானே ‘தினமணி’ மார்தட்டி அறை கூவி அழைக்கவேண்டும்? அந்த ஆண்மை இல்லாததினால்தானே ‘தினமணி’ எதிரி களைத் திட்ட முன் வந்திருக்கிறது? வசவு களுக்கும், போக்கிரித்தனத்துக்கும் பயந்து எந்த அரசியல் கட்சியாவது பின் வாங்குமா?
“நமது மாகாணத்தைப் பொறுத்த வரை யில் ஜஸ்டிஸ் கட்சியைக் கழுதை தேய்ந்து கட்டெறும்பான மாதிரி செய்தாய் விட்டது” என ‘தினமணி’ பெருமையடித்துக்கொள்கிறது. அப்படியானால் ஜஸ்டிஸ் மீது ‘தினமணி’ சதா சீறி விழுந்து கொண்டிருப்பதேன்? கட்டெறும் புகளைத் தாக்குவது தான் ‘தினமணி’ யின் வீரமா? வாஸ்தவத்தில் சமீபத்தில் திருச்சி, வேலூர், ஆந்திர தேசம் முதலிய இடங் களிலும் சென்னை நகர சபைத் தேர்தலில் 10 டிவிஷன்களிலும் காங்கிரசுக்கு ஏற்பட்ட படுதோல்விகள் ‘தினமணி’ யின் மூளையைக் குழப்பிவிட்டது. வரப்போகும் தேர்தலில் காங்கிரஸ் ‘கோவிந்தா” ஆகப்போகிறதையும் ‘தினமணி’ முன்னாடியே உணர்ந்துகொண்டு விட்டது. ஆகவே, பைத்தியம் பிடித்த மாதிரி ஆபாசம் பேசி தென்னாட்டுப் பத்திரிகை யுலகத்தைக் குட்டிச் சுவராக்க “தினமணி’’ வரிந்து கட்டிக் கொண்டு புறப்பட்டிருக்கிறது. ஜஸ்டிஸ் கட்சி மீதுள்ள பகையினால் மான வுணர்ச்சியையே ‘தினமணி’ முற்றிலும் இழந்துவிட்டது. மாஜிஸ்டிரேட்டுகளைப் பார்த்தும் ‘தினமணி’ பூச்சாண்டி காட்டுகிறது.’ அடுத்த தேர்தலில் காங்கிரஸ்காரர்தான் மெஜாரிட்டியாக வரப்போகிறபடியால், சில்லரை விஷமங்கள் செய்வது ஆபத்து என்பதை போலீசாருக்கும், மாஜிஸ்டிரேட்டு களுக்கும் எச்சரிக்க விரும்புகிறோம் எனவும் ‘தினமணி’ கூறுகிறது.
அடுத்த தேர்தலில் காங்கிரசுக்கு மெஜாரிட்டி கிடைப்பது அவ் வளவு நிச்சயமானால் ‘தினமணி’ அத்தைப் பாட்டிகள் மாதிரி இப்பொழுது வயிற்றிலடித் துக் கொள்ளுவதேன்? மற்ற கட்சிகளைப் பார்த்துப் பயப்படுவதேன்? ‘தினமணி’யின் போக்கைப் பார்த்தால், ஜஸ்டிஸ் கட்சி, ‘தின மணி’யின் மூளையை வெகுவாகக் குழப்பி வருவதாகவே தோன்றுகிறது. ஜஸ்டிஸ் கட்சியைப் பற்றி ‘தினமணி’ சதா கனவு காண்பதினால் ‘தினமணி’யின் மூளையே கெட்டுப்போய் விட்டது. வரப்போகும் தேர்த லில் ஜஸ்டிஸ் கட்சி வெற்றி பெற்று விட்டால் ‘தினமணி’ காரியாலயத்தார் முச்சூடும் தற் கொலை செய்து விடுவார்களோ என அஞ்ச வேண்டியதாகவும் இருக்கிறது. அசல் பார்ப் பனப் பத்திரிகைகளுக்குக் கூட ஜஸ்டிஸ் கட்சி மீது அவ்வளவு வெறுப்பையும் பகை யையும் காணவில்லை. ஒரு பார்ப்பனரல்லா தாரைப் பிரதம ஆசிரியராகக் கொண்ட ‘தினமணி’ ஜஸ்டிஸ் கட்சி மீது சதா வசைபுராணம் பாடிக் கொண்டு இருப்பதுதான் ஆச்சரியமாக இருக்கிறது.
‘‘ஆற்றிலே இருந்து அரகரா என்றாலும் சோற்றிலே இருக்குது சொக்கலிங்கம்’’ என்ற பழமொழி பொய்யாகுமா?
– ‘விடுதலை’ – 11.11.1936