சென்னை, பிப். 16- மக்களவை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. தேர்தல் தேதி அடுத்த மாதம் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளதால், அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு ஆயத்தமாகி வருகின்றன.
தமிழ்நாட்டில் தி.மு.க தனது கூட்டணிக் கட்சிகளிடம் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ், வி.சி.க, ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. கூட்டணிக் கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகளை ஒதுக்கலாம். எந்தெந்த தொகுதிகளை ஒதுக்கலாம் என்பது குறித்து தி.மு.க ஆலோசனை நடத்தி வருகிறது.
இந்த நிலையில், தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் விருப்ப மனுவை பெறலாம் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
மக்களவை தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ள நிர்வாகிகள் வரும் 19ஆம் தேதி முதல் விண்ணப்பங் களை பெறலாம். விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அடுத்த மாதம் 1ஆம் தேதி முதல் 7ஆம் தேதி மாலை 6 மணிக்குள் சமர்பிக்க வேண்டும். அண்ணா அறி வாலயத்தில் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம். அதேபோல், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அண்ணா அறிவாலயத்தில் உள்ள அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
மக்களவைத் தேர்தல் தி.மு.க.வினருக்கு விண்ணப்பம் 19ஆம் தேதி முதல் வழங்கப்படும்
Leave a comment