பட்டுக்கோட்டை, பிப். 16- பட்டுக் கோட்டை நகர பகுத்தறி வாளர் கழக மேனாள் தலைவரும், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரும், சட்ட எரிப்பு வீரருமான பெரியார் பெருந்தொண் டர் சா.. பன்னீர்செல்வம் 13.2.2024 செவ்வாய் அன்று அதிகாலை உடல் நலக்குறை வால் பட்டுக்கோட்டையில் அவர்களது இல்லத்தில் மறைவுற்றார்.
ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் சா.ப. என்று அனைவராலும் அன்பு டன் அழைக்கப்பட்ட பன் னீர்செல்வம் ஜாதி ஒழிப் பிற்காக தந்தை பெரியார் அறிவித்த சட்ட எரிப்புப் போராட் டத்தில் கலந்து கொண்டு சிறை தண் டனை பெற்ற வர் என்பது குறிப்பிடத்தக்கது.
தகவல் அறிந்து திராவிடர் கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் 14.2.2024 புதன் அன்று மாலை 3.30 மணி அள வில் பட்டுக்கோட்டை மதுக்கூர் சாலையில் உள்ள அவர்களது இல் லத்திற்கு நேரில் சென்று மாலை வைத்து இறுதி மரியாதை செலுத் தினார். அவர்தம் குடும் பத்தினருக்கு ஆறுதலை யும் இரங்கலையும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் நகர தலைவர் பொறியாளர் சிற்பி வை.சேகர், மாவட்ட வழக்குரைஞர் அணி தலைவர் அ.அண்ணா துரை, மாவட்ட பகுத்தறி வாளர் கழக தலைவர் ஆ..இரத்தினசபாபதி, மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் புலவஞ்சி.இரா.காமராஜ், பொதுக்குழு உறுப்பினர் பேராவூரணி இரா.நீலகண்டன், மாவட்ட கழக துணைச் செயலாளர் அ.காளிதாசன், ஒன்றியத் தலைவர் ரெ.வீரமணி, நகர செயலாளர் கா.தென்னவன், இளைஞ ரணி தலைவர் ஆசை பாண்டி, பகுத்தறிவாளர் கழக தோழர் அடல் எழிலன் என்கின்ற பட் டாபிராமன், பேராவூ ரணி சித..திருவேங்கடம், ஒன்றிய கழக செயலாளர் ஏனாதி சி.ரெங்கசாமி, மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் முத்து துரைராஜ், மதுக்கூர் ஒன்றிய பகுத்தறிவாளர் கழக தலைவர் சிவஞா னம், அமைப்பாளர் ரெ. திருமேனி மற்றும் பூவுல கின் நண்பர்கள் அமைப்பு பொறுப்பாளர் சுந்தர் ராஜன், வழக்குரைஞர்கள் பிரகாசம், சிவகுரு மற்றும் அரசுத்துறை அலுவலர் கள், ஆசிரியர்கள், நகர முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு இறுதி மரியாதை செலுத்தினர். பிறகு உடல் மாலை 5 மணி அளவில் எடுத்துச் செல்லப்பட்டு பட்டுக் கோட்டை மின் மயானத் தில் எரியூட்டப்பட்டது. மறைந்த சா.ப. என்கின்ற பன்னீர்செல்வம் அவர்க ளுக்கு லீலா என்கின்ற துணைவியாரும், பூங்கும ரன் என்கின்ற மகனும், பூங்குழலி என்கின்ற மக ளும் உள்ளனர்.