கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

1 Min Read

15.2.2024
டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்
* காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி நேற்று ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங் களவைக்கு போட்டியிட தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
டெக்கான் கிரானிக்கல், சென்னை
* தடையையும் பொருட்படுத்தாமல் டில்லி அருகே விவசாயிகள் தொடர்ந்து போராட்டம்.
* டில்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால், பஞ்சாப் முதலமைச்சர் பக்வத் மான் ஆகியோரை சந்திக்கிறார் மம்தா. “இந்தியா” கூட்டணி குறித்து முடிவெடுக்க இருப்பதாக தகவல்.
தி இந்து
* ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான தேர்தல் கண்காணிப்பு சங்கத்தின் (கிஞிஸி) அறிக்கையின்படி, பாரதிய ஜனதா கட்சி 2022-2023ஆம் ஆண்டில் கார்ப்பரேட் நன்கொடைகள் மூலம் ரூ.680.49 கோடி பெற்றுள்ளது. இது ஒட்டு மொத்த நன்கொடையில் 90 சதவீதம் ஆகும். அனைத்து கட்சிகளும் சேர்ந்தே மீதமுள்ள 10 சதவீத நன்கொடையான ரூ.70 கோடி பெற முடிந்தது.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
* பஞ்சாப் விவசாயிகள் இன்று டில்லிக்கு அணிவகுத்துச் செல்கின்றனர். பத்திரிகைச் செய்திகளின்படி, அரியானாவில் அவர்களுக்காக சிறைகள் தயார் நிலையில் உள்ளன, தடுப்புக் கட்டைகள் உள்ளன. அவற்றைத் தடுக்க அனைத்து வகையான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன; இவர்கள் விவசாயிகள், அவர்கள் குற்றவாளிகள் அல்ல என விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் மகள் பொருளாதார நிபுணர் மதுரா சுவாமிநாதன் காட்டம்.
டைம்ஸ் ஆப் இந்தியா
* ஒன்றிய அரசு கொண்டு வர திட்டமிட்டுள்ள ‘தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையை கைவிட வேண்டும்’, ‘ஒரே நாடு – ஒரே தேர்தலுக்கு எதிர்ப்பு’ ஆகிய 2 தீர்மானங்களை தமிழ்நாடு சட்டப் பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (14.2.2024) முன் மொழிந்தார். இந்த தீர்மானங்கள், அனைத்துக் கட்சி உறுப்பினர்கள் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேறின.
– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *