டில்லியில் இடைத்தரகர்கள் தான் போராட்டம் நடத்துகிறார்களாம்! தமிழ்நாடு பிஜேபி விவசாய அணித் தலைவர் திமிர் பேச்சு!

viduthalai
1 Min Read

ஈரோடு, பிப்.15 டில்லியில் இடைத் தரகர்கள்தான் போராட்டம் நடத்துகின்றனர் என்று தமிழ்நாடு பாஜக விவசாய அணித் தலைவர் ஜி.கே.நாகராஜ் கூறினார்.
ஈரோட்டில் செய்தியாளர்களிடம் அவர் கூறிய தாவது: கொங்கு மண்டலத்தில் விசைத்தறி, கோழிப் பண்ணை, போர்வெல் தொழில் உள்ளிட்டவை நசிந்து வருகின்றன. இவற்றைக் காக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அத்திக்கடவு-அவிநாசி திட்டம் கடந்த ஆட்சியில் 90 சதவீதம் முடிவடைந்த நிலையில், மீதமுள்ள 10 சதவீதம் பணியை 3 ஆண்டுகளாக மேற்கொண்டு வருகின்றனர். பணிகளை விரைவாக முடித்து, திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.நெல் சாகுபடி குறைந்துள்ளதே அரிசி விலை ஏற்றத்துக்கு காரணமாகும்.
ஒன்றிய அரசு அமல்படுத்தி உள்ள வேளாண் சட்டத்தின் 3 பிரிவுகளும் தமிழ்நாட்டில் நடை முறையில் உள்ளன. அதனால் இங்கு விவசாயிகள் யாரும் பாதிக் கப்படவில்லை. ஆனால் பஞ்சாப் மாநிலத்தில் போராட்டம் தூண்டி விடப்படுகிறது.
நெல் கொள்முதலில் பஞ்சாப் விவசாயிகள் அதிக அளவில் மானி யம் பெறுகின்றனர். டில்லி போராட்டத்தில் இடைத் தரகர்கள் தான் ஈடுபடுகின்றனர். ஆம்ஆத்மி, காங்கிரஸார் போராட் டத்தை தூண்டிவிடுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *