டில்லி விவசாயிகள் போராட்டம் 15 அமைப்புகள் ஆதரவு

viduthalai
1 Min Read

சென்னை, பிப்.15 விவசாயிகள் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் என்றும், விவசாயிகள் சங்கங்கள் அறிவித்துள்ள நாடு தழுவிய பிப்.16 வேலை நிறுத்தத் துக்கு ஆதரவு தெரிவித்தும் தமிழ் நாட்டைச் சேர்ந்த 15 அமைப்புகள் கூட்ட றிக்கை வெளியிட்டுள்ளன.

மக்களே முதன்மை அமைப்பின் தலைவர், மேனாள் அய்ஏஎஸ் அதி காரி எம்.ஜி.தேவசகாயம், ஒருங்கிணைப்பாளர் தாமஸ் பிராங்கோ, தமிழ்நாடு பொது மேடை அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மேனாள் நீதிபதி அரி பரந்தாமன், அய்க்கிய விவசாயிகள் முன்னணி ஒருங்கிணைப் பாளர் கே.பாலகிருஷ் ணன் உள்ளிட்ட 15 அமைப்புகளை சேர்ந்த வர்கள் கூட்டாக

வெளியிட்ட அறிக்கை:
டில்லியை நோக்கி கோரிக்கை பேரணி நடத் தும் விவசாயிகள் மீது ட்ரோன் மூலம் கண்ணீர் புகை குண்டுகளை வீசு வதும், ரப்பர் புல்லட்டால் தாக்குவதும், சாலையை மறிப்பதும், கைது செய் வதும் வன்மையாக கண்டிக்கத் தக்கது. அவர்கள் மீதான தாக் குதலை நிறுத்த வேண்டும்.

100 நாள் வேலை திட்டத்தை 200 நாளாக உயர்த்தி ரூ.600 ஊதியம் வழங்க வேண்டும். விவசாயிகளின் விளை பொருட் களுக்கு, சாகுபடிக்கான அடக்க விலை யுடன் 50 சதவீதம் சேர்த்து குறைந்த பட்ச ஆதரவு விலையை நிர்ணயிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல் வேறு கோரிக் கைகளை முன்வைத்து நாடு முழு வதும் பிப்.16-ஆம்தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை விவசாயிகள் அறிவித்துள்ளனர். இதற்கு தமிழ் நாட்டில் உள்ள 15 அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள் ளன.
இவ்வாறு அறிக்கை யில் கூறப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *