“எக்ஸ்போசாட்” மூலம் விண்மீன் மண்டலத்தில் தகவல்கள் சேகரிப்பு: இஸ்ரோ தகவல்

2 Min Read

சிறீஅரிகோட்டா,பிப்.15- விண் வெளியில் உள்ள நிறமாலை, தூசு, கருந்துளை வாயுக்களின் மேகக் கூட்டமான `நெபுலா’ உள்ளிட்டவற்றை ஆராய, இந் திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் (இஸ்ரோ) திட்ட மிட்டு இருந்தது.

இதற்காக ‘எக்ஸ்போசாட்’ என்ற செயற்கைக் கோளை இஸ்ரோ வடிவமைத்து இருந் தது. இதனை ஆந்திர மாநிலம் சிறீஅரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மய்யத்தில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் இருந்து, கடந்த மாதம் 1ஆம் தேதி பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட் மூலம் இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் ஏவி யது. பூமியில் இருந்து 650 கிலோ மீட்டர் உயரத்தில் புவி வட்டப் பாதையில் செயற்கைக் கோள் நிலை நிறுத்தப்பட்டது. அதில் இருந்து தற்போது விண்வெளி தரவுகள் சேகரிக்கப்பட்டு வரு கிறது.
இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறும்போது, ‘இஸ் ரோவால் விண்ணில் ஏவப்பட்ட ‘எக்ஸ்போசாட்’ செயற்கைக் கோள், பூமியில் இருந்து 650 கிலோ மீட்டர் உய ரத்தில் குறைந்த புவி சுற்றுப் பாதையில் இயங்கி வருகிறது.

இதில் இந்திய எக்ஸ்ரே ‘போலரிமீட்டர்’ (போலிக்ஸ்) மற்றும் எக்ஸ்ரே ‘ஸ்பெக்ட் ரோஸ்கோபி’ ஆகிய 2 கருவிகள் உள்ளன.
இதில் போலரி மீட்டர் அறிவியல் ஆய்வுகளை தொடங்கி உள்ளது. குறிப்பாக ‘போலிக்ஸ்’ என்ற கருவி வாயுக்களில் உள்ள மேகக் கூட்டங்கள் குறித்து ஆய்வு செய்து விண்மீன் மண்ட லத்தில் உள்ள தரவுகள், புகைப் படங்களை சேகரித்துள்ளது.

எக்ஸ்போசாட் செயற்கைக் கோளை பயன்படுத்தி பெறப் பட்ட தரவு மற்றும் அளவீடுகள் மிகவும் பிரகாசமான விண் வெளி பொருட்களைப் படிக்க பயன்படுத்தப்படும்.
அத்துடன் எக்ஸ்ரே துருவ முனைப்பு துறையில் அடித் தளத்தை அமைக்கும்.

அதே நேரம் ‘ஸ்பெக்ட்ரோஸ் கோபி’ கருவி விரைவில் பணியை தொடங்கும் வகையில் விஞ்ஞான செயல்பாடுகளுக்கு இப் போது தயாராக உள்ளது.
போலிக்ஸ் கருவி பெங்களூ ருவில் உள்ள ராமன் ஆராய்ச்சி நிறுவனத்தில் உள்ள எக்ஸ்ரே வானியல் ஆய்வகத்தால் வடி வமைக்கப்பட்டு உருவாக்கப் பட்டது. இந்த கருவியானது இந்திய தொழில்துறையின் ஆத ரவுடன் உள்நாட்டிலேயே உரு வாக்கப்பட்டது’ என்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *