பகுத்தறிவு பாசறை சார்பில் சு.அறிவுக்கரசு படத்திறப்பு

1 Min Read

சென்னை,பிப்.15- சென்னை கொரட்டூரில் சு.அறிவுக் கரசு படத்திறப்பு நிகழ்ச்சி 10-02-2024 சனிக்கிழமை மாலை 06-30 மணிக்கு பெரியார் அண்ணா ‌கலைஞர் பகுத்தறிவு பாசறையின் 407ஆவது வார நிகழ்வாக பாசறை ஒருங்கிணைப்பாளர் இரா.கோபால் அழைப்பில் ஆவடி மாவட்ட திராவிடர் கழக துணை செயலாளர் உடுமலை வடிவேல் தலைமையில் செயலாளர் க.இளவரசன் முன்னிலையில் மாவட்ட கழக காப்பாளர் பா.தென்னரசு திறந்து வைத்து அனைவரும் இரண்டு நிமிடம் அமைதி காத்து, மரியாதை செலுத்தினர். துணைதலைவர் வை.கலை யரசன், தேவேந்திர குமார் (மாமன்ற மேனாள் உறுப்பினர்), கு.சங்கர் (அம்.தெ.ப.பொ.தி.மு.க.) ஆகியோர் நினைவேந்தலுரையாற்றினர்.
நிகழ்வில். முரளி, இராஜா, பிச்சை மணி, சிறீதரன், உதயசூரியா,சிவகாந்தி, வழக்குரைஞர் பன்னீர் செல்வம், புஷ்பா, அருள் விழியன், விஜய், ஜெயா, சூரியதாசன், சுமதி மணி, கருப்பசாமி, ஆறுமுகம், ஹரிதாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியில் தமிழ் மதி ( மாணவர் கழகம்) நன்றி கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *