சென்னை,பிப்.15- சென்னை கொரட்டூரில் சு.அறிவுக் கரசு படத்திறப்பு நிகழ்ச்சி 10-02-2024 சனிக்கிழமை மாலை 06-30 மணிக்கு பெரியார் அண்ணா கலைஞர் பகுத்தறிவு பாசறையின் 407ஆவது வார நிகழ்வாக பாசறை ஒருங்கிணைப்பாளர் இரா.கோபால் அழைப்பில் ஆவடி மாவட்ட திராவிடர் கழக துணை செயலாளர் உடுமலை வடிவேல் தலைமையில் செயலாளர் க.இளவரசன் முன்னிலையில் மாவட்ட கழக காப்பாளர் பா.தென்னரசு திறந்து வைத்து அனைவரும் இரண்டு நிமிடம் அமைதி காத்து, மரியாதை செலுத்தினர். துணைதலைவர் வை.கலை யரசன், தேவேந்திர குமார் (மாமன்ற மேனாள் உறுப்பினர்), கு.சங்கர் (அம்.தெ.ப.பொ.தி.மு.க.) ஆகியோர் நினைவேந்தலுரையாற்றினர்.
நிகழ்வில். முரளி, இராஜா, பிச்சை மணி, சிறீதரன், உதயசூரியா,சிவகாந்தி, வழக்குரைஞர் பன்னீர் செல்வம், புஷ்பா, அருள் விழியன், விஜய், ஜெயா, சூரியதாசன், சுமதி மணி, கருப்பசாமி, ஆறுமுகம், ஹரிதாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியில் தமிழ் மதி ( மாணவர் கழகம்) நன்றி கூறினார்.
பகுத்தறிவு பாசறை சார்பில் சு.அறிவுக்கரசு படத்திறப்பு
Leave a comment