நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் மீண்டும் கொலைவெறித் தாக்குதல்!

Viduthalai
1 Min Read

அரசியல்

வேதாரண்யம்,அக்.7- நாகை மாவட்டம் வெள்ளப்பள்ளத்தைச் சேர்ந்தவர்கள் மணியன் (வயது 55), வேல்முருகன் (27), சத்யராஜ் (30), அக்கரைப்பேட்டையை சேர்ந்த வர் கோடிலிங்கம் (53). இவர்கள் 4 பேரும் மீனவர்கள். இவர்கள் அஞ்சலையம்மாள் என்பவருக்கு சொந் தமான படகில் மீன் பிடிக்க புறப் பட்டனர்.

கோடியக்கரைக்கு தென்கிழக்கு கடல் பகுதியில் நள்ளிரவில் இவர் கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது ஒரு படகில் 3 இலங்கை கடல் கொள்ளையர்கள் வந்தனர். அவர்கள் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததோடு, மீனவர் களின் படகை சுற்றி வளைத்தனர். தொடர்ந்து மீனவர்கள் படகில் ஏறி கத்தியை காட்டி பொருட்களை கொடுக்குமாறு மிரட்டினர்.

பின்னர் மீனவர்களை சரமாரி யாக கத்தியால் குத்தி விட்டு சுமார் ரூ. 3 லட்சம் மதிப்புள்ள வலை, ஜி.பி.எஸ். கருவி உள்பட பல்வேறு உபகரணங்களை கொள்ளைய டித்து தப்பினர்.

இலங்கை கடற்கொள்ளையர் களின் இந்த கொடூர தாக்குதலால் மீனவர்கள் மணியன், கோடிலிங் கம், வேல்முருகன், சத்தியராஜ் ஆகிய 4 பேரும் பலத்த காயம் அடைந்தனர்.

இதையடுத்து அவர்கள் காயத் துடன் வேக வேகமாக கரைக்கு திரும்பி உறவினர்களிடம் நடந்த விவரங்களை கூறினர். அதனை தொடர்ந்து 4 பேரும் ஆம்புலன்சில் நாகை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப் பட்டனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து கடலோர காவல் படை காவல் துறையினர் விசா ரணை நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட மீனவர்களை சந் தித்து தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன், மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் ஆகி யோர் ஆறுதல் கூறினர்.

தமிழ்நாடு மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தும் நிகழ்வுகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இலங்கை கடற் கொள்ளையர்களின் தொடரும் அட்டூழியம் மீனவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற் படுத்தியுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *