இளைஞர்களுக்கு கடலோர காவல் படை பணி

1 Min Read

இந்திய கடலோர காவல்படையில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.
காலியிடம்: நேவிக் (ஜெனரல் டியூட்டி) பிரிவில் 261 இடங்கள் உள்ளன. இதில் மண்டலம் வாரியாக வடக்கு 79, மேற்கு 66, வடகிழக்கு 68, கிழக்கு 33, வடமேற்கு 12, அந்தமான் நிகோபர் 3 உள்ளன. கிழக்கு மண்டலத்தில் ஆந்திரா, தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளன.
கல்வித் தகுதி: கணிதம், இயற்பியல் பாடத்துடன் பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும்.
வயது: 18 – 22 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை: இணைய வழித் தேர்வு, உடல்தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு.
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழியில்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ. 300. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசி நாள்: 27.2.2024
விவரங்களுக்கு: joinindiancoastguard.cdac.in

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *