விருதுநகர் பகுதியில் மகாவீரர் சிற்பம் கண்டுபிடிப்பு

viduthalai
2 Min Read

விருதுநகர்,பிப்.14- விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகேயுள்ள மணவராயனேந்தலில், 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மகாவீரர் சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள் ளது.
மணவராயனேந் தலில், அருப்புக் கோட்டை எஸ்.பி.கே., கல்லூரி வர லாற்று துறை உதவிப் பேராசிரியர் ராஜ பாண்டி, தொல்லியல் துறை பயிற்சி மாணவர் சரத் ராம் ஆகியோர் கள ஆய்வு செய்தனர்.
அப்போது, இளைய ராஜா என்பவரது தோட் டத்தில், மண்ணில் புதைந்த நிலையில், 24ஆம் தீர்த்தங்கரரான மகாவீரர் சிற்பம் இருப்பதை கண் டறிந்தனர்.
இது குறித்து, இராம நாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் ராஜகுருவிடம் தெரிவித்தனர்; அவர் நேரில் ஆய்வு செய்தார்.

மண்ணுக்குள் புதையல்
அவர் கூறியதாவது:
மணவராயனேந் தலில் கண்டுபிடிக்கப்பட் டுள்ள கருங்கல்லால் ஆன மகாவீரர் சிற்பம், மண்ணில் பாதி புதைந்த நிலையில் உள்ளது.
இதில், மகரத் தண்டு களுடன் கூடிய சிம்மாச னத்தில் மகாவீரர் அமர்ந் துள்ளார்.
அவருக்கு பின்னால், பிரபாவளி எனும் ஒளி வட்டமும், அதன் மேற் பகுதியில் சந்திராதித்தம், நித்தியவிநோதம், சகல பாசனம் ஆகியவற்றை குறிக்கும் முக்குடை அமைப்பும் உள்ளது.
அதில், அழகிய கொடி கள் அலங்கரிக்கப்பட் டுள்ளன.
மகாவீரரின் இருபுற மும் இரு இயக்கர்கள் உள்ளனர். இந்த சிற் பத்தின் வடிவமைப்பின் படி, 11ஆம் நூற்றாண் டாகக் கருதலாம்.

சமணப் பரவல்
விருதுநகர் மாவட் டத்தில், கோவிலாங் குளம், தொப்பலாக்கரை, குறண்டி, இருஞ் சிறை, புல்லூர், பாலவநத்தம், பந்தல்குடி, பாறைக் குளம், புலியூரான், ஆவியூர், இருப்பைக்குடி, குலசேகர நல்லூர், சேத் தூர், சென்னிலைக்குடி, கீழ்இடையங்குளம், கிள்ளுக்குடி உள்ளிட்ட ஊர்களில், சமண சமயம் பரவி இருந்ததற்கான தடயங்கள் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுள் ளன.
மேலும், திருப்புல் லாணியில் இருந்து கமுதி, திருச்சுழி வழியாக, மதுரை செல்லும் பெரு வழி பாதையிலும் பல இடங்களில், தீர்த்தங்கரர் சிற்பங்கள் கண்டெடுக் கப்பட்டு உள்ளன.
இந்நிலையில், திருச் சுழியிலும் மகாவீரர் சிற் பம் கிடைத்துள்ளதால், இந்த பகுதியில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சமண சமயம் செழித்திருந் ததை உறுதிப்படுத்து கிறது.
அது மட்டுமின்றி, அந்த சிற்பம் இருந்த இடத்தின் சுற்றுவட்டார பகுதிகளில், இரும்பு காலத்தைச் சேர்ந்த வழு வழுப்பான கருப்பு – சிவப்பு நிற பானை ஓடுகள் சிதறியுள்ளன.
எனவே, இந்த ஊர், 2,000 ஆண்டுகளாக மக் களின் வாழ்விடப் பகுதி யாக இருந்துஉள்ளதை அறிய முடிகிறது.
இந்த சிற்பம் மண் ணில் புதைந்து பாதுகாப் பில்லாமல் உள்ளதால், இதை அரசு அருங்காட்சி யகத்தில் வைத்து பாது காக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி னார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *