நீண்ட காலமாக சிறையில் இருந்த முஸ்லிம் கைதிகளுக்கு இடைக்கால பிணை

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, அக். 7-  நீண்டகாலமாக சிறையில் உள்ள முஸ்லிம் கைதிகள் உள்ளிட்ட 49 கைதிகளை நன் னடத்தை அடிப்படையில் முன் கூட்டியே விடுதலை செய்ய தமிழ் நாடு அரசு முடிவு எடுத்து அதற் கான பரிந்துரையை ஆளுநருக்கு அனுப்பி வைத்தது.

ஆனால் இந்த பரிந்துரைக்கு ஆளுநர் இன்னும் ஒப்புதல் வழங்க வில்லை. இந்நிலையில், சிறையில் உள்ள கைதிகளை நன்னடத்தை அடிப்படையில் விடுவிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

மேலும், சிறையில் உள்ள கைதிகள் ஷாகுல் ஹமீது, அஸ் லாம்  உள்ளிட்ட 5 பேருக்கு பிணை கோரி இடைக்கால மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. 

இந்த வழக்குகள் நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. 

அப்போது கூடுதல் குற்றவியல் வழக்குரைஞர் ராஜ் திலக் ஆஜ ராகி, “நன்னடத்தை அடிப்படை யில் சிறையில் உள்ள கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்யும் தமிழ்நாடு அரசின் பரிந்துரைக்கு இன்னும் ஆளுநர் ஒப்புதல் அளிக்க வில்லை. அந்த பரிந்துரை தொடர்ந்து நிலுவையில் உள்ளது” என்றார்.

மேலும், “உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற உத்தரவுகளின் அடிப் படையில் தற்போது பிணை கோரி உள்ள சிறைவாசிகளை விடுவிப் பதற்கான கோப்புகள் ஆளுநரிடம் நிலுவையில் இருப்ப தால், பிணை வழங்குவதில் அரசுக்கு எந்த ஆட் சேபமும் இல்லை” என்றார். 

அதையடுத்து நீதிபதிகள், 5 பேருக் கும் 3 மாத காலத்துக்கு இடைக் கால மாக நிபந்தனை பிணை வழங்கி விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *