பாராட்டத்தக்க தேர்வு!

2 Min Read

உரிமையியல் நீதிபதி பணி தேர்வில்
பழங்குடியின இளம்பெண் தேர்ச்சி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து – பாராட்டு

சென்னை,பிப்.14- சமூகநீதி என்ற சொல்லை உச்சரிக்கக் கூட மன மில்லாமல் தமிழ்நாட்டில் வளைய வரும் சிலருக்கு சிறீபதி போன்றோரின் வெற்றிதான் தமிழ்நாடு தரும் பதில் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது சமூக வலைத்தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலை அடுத்த புலியூர் மலை கிராமத்தை சேர்ந்தவர் பழங்குடியின பெண் சிறீபதி (வயது 22). இவர் ஏலகிரி மலையில் உள்ள பள்ளியில் கல்வி கற்று பின்னர் அப்பகுதியில் பி.ஏ, பி.எல் சட்டப்படிப்பு படித்தார்.
படித்துக் கொண்டிருக்கும்போதே சிறீபதிக்கு திருமணம் ஆகியுள்ளது. மேலும் இவருக்கு குழந்தை உள்ளது. இந்த நிலையில் கடந்த ஆண்டு நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி சிவில் நீதிபதி தேர்வு நடைபெற்றது.
இந்த தேர்வுக்கு தயாராகி வந்த சிறீபதி பிரசவ தேதியும், தேர்வு தேதியும் ஒரே நாளில் வந்ததால் அதிர்ச்சி அடைந்தார்.
அதன் பிறகு தேர்வுக்கு முந்தைய நாளே சிறீபதிக்கு பிரசவமாகி குழந்தை பிறந்துள்ளது.
அவருக்கு குழந்தை பிறந்தாலும், தேர்வு எழுதுவதில் சிறீபதி உறுதியாக இருந்துள்ளார்.
மேலும் சிறீபதியின் கணவர் மற்றும் நண்பர்கள் உதவியுடன் பிரசவம் ஆன 2ஆவது நாளில் காரில் பயணம் செய்து சிவில் நீதிபதி தேர்வு எழுதியுள்ளார். தற்போது வெளியான டிஎன்பிஎஸ்சி சிவில் நீதிபதி தேர்வு முடிவில் சிறீபதி சிவில் நீதிபதியாக தேர்வாகியுள்ளார்.
இதன்மூலம் ஜவ்வாது மலையில் 22 வயதில் சிவில் நீதிபதியாக தேர்வாகி யுள்ள பழங்குடியின பெண் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
இந்த நிலையில், பெண் நீதிபதி சிறீபதிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்ப தாவது:-
திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையை அடுத்த புலியூர் கிராமத்தைச் சேர்ந்த திருமதி சிறீபதி அவர்கள் 23 வயதில் உரிமையியல் நீதிபதி தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்!

பெரிய வசதிகள் இல்லாத மலைக் கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியினப் பெண் ஒருவர் இளம் வயதில் இந் நிலையை எட்டியிருப்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்.
அதுவும் நமது # DravidianModel அரசு தமிழ்வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை எனக் கொண்டு வந்த அரசாணையின் வழியே சிறீபதி நீதிபதியாகத் தேர்வாகி யுள்ளார் என்பதை அறிந்து பெருமை கொள்கிறேன்.
அவரது வெற்றிக்கு உறுதுணையாக நின்ற அவரது தாய்க் கும் கணவருக்கும் எனது பாராட்டுகள்!
சமூகநீதி என்ற சொல்லை உச்சரிக் கக் கூட மனமில்லாமல் தமிழ்நாட்டில் வளைய வரும் சிலருக்கு சிறீபதி போன் றோரின் வெற்றிதான் தமிழ்நாடு தரும் பதில்!
“நெடுந்தமிழ் நாடெனும் செல்வி, – நல்ல
நிலைகாண வைத்திடும்; பெண்களின் கல்வி!
பெற்றநல் தந்தைதாய் மாரே, – நும்
பெண்களைக் கற்கவைப் பீரே!
இற்றைநாள் பெண்கல்வி யாலே, – முன்
னேறவேண் டும்வைய மேலே!”
-இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *