ஜாதிவாரிக் கணக்கெடுப்புக்குத் தடை விதிக்க முடியாது : உச்சநீதிமன்றம்

1 Min Read

அரசியல்

புதுடில்லி, அக்.7- ஜாதிவாரிக் கணக் கெடுப்புக்குத் தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் திட்டவட்ட மாக தெரிவித்துள்ளது. 

நாட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், பீகாரில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாநிலங்களுக்கு அதிகாரமில்லை, ஒன்றிய அரசின் உரிமையைப் பறிக்கும் விதமாக உள்ளது என்று கூறி மாநிலங்கள் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தத் தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, எஸ்.வி.என். பாட்டி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு  விசாரணைக்கு வந்தது.

அப்போது, ‘பீகாரில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு ஏற் கெனவே தரவுகள்வெளியாகிவிட்டன. இனிமேல் தடை விதிக்க முடியாது. 

மேலும், மாநிலங்களின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தத் தடை விதிக்க முடியாது. ஜாதிவாரி கணக்கெடுப்பு தரவுகளில் ஏதேனும் சிக்கல் இருந்தால் நீதிமன்றம் தலையிடும்’ என்று நீதிபதிகள் கூறி வழக்கை வருகிற ஜனவரி மாதத்துக்கு ஒத்திவைத்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *