கன்னியாகுமரி மாவட்ட கல்லூரி மாணவர்கள் மத்தியில் பகுத்தறிவு விழிப்புணர்வு பரப்புரை

1 Min Read

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பெரியார் கருத்துகளை எடுத்துக்கூறும் முயற்சிகளை குமரி மாவட்ட கழகம், திராவிட மாணவர் கழகம் செய்து வருகின்றது. குமரி மாவட்டம், தோவாளை ஊராட்சி ஒன்றியம், ஆரல்வாய்மொழி அருகேயுள்ள செண்பகராமன்புதூர் கிராமத்தில் உள்ள எம்.இ.டி. கல்வியியல் கல்லூரியில் உள்ள மாணவர்களுக்கு தந்தை பெரியாருடைய நூல்கள் வழங்கப்பட்டன. பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் உ.சிவதாணு, கழக மாவட்டத் தலைவர் மா.மு.சுப்பிரமணியம், கழக மாவட்டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன், துணைத் தலைவர் ச.நல்லபெருமாள், பொதுக்குழு உறுப்பினர் ஆரல்வாய்மொழி மா.மணி மற்றும் தோழர்கள் பங்கேற்று அனைத்து மாணவர் களுக்கும் பெரியாருடைய நூல்களை வழங்கினர். மாணவர்களும் பெரியாருடைய நூல்களை ஆர்வமுடன் வாங்கிப் படித்தனர். தொடர்ந்து பெரியாருடைய கருத்துக் களை தோழர்கள் பரப்புரை செய்து வருகின்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *