மாநில மக்களின் உணர்வுகளை மதிக்கும் ஒன்றிய அரசை உருவாக்குவோம் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி

viduthalai
3 Min Read

சேலம், பிப். 13- நாடாளுமன்ற தேர்தலையொட்டி தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து வியா பாரிகள், தொழில் முனைவோர், நிறுவனங்களின் உரிமையாளர் கள், தொழிலாளர்கள், விவசாயி கள் உட்பட பல்வேறு தரப்பின ரையும் சந்தித்து கருத்து கேட்டு வருகிறார்கள்.
கோவையில் 10.2.2024 அன்று கருத்துக் கேட்பு நிகழ்ச்சி நடந்த நிலையில் 11.2.2024 அன்று சேலம் 5 ரோடு ஜென்னிஸ் கேட்வே விடுதியில் சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந் தவர்களிடம் கருத்து கேட்கப் பட்டது.
இதில் தி.மு.க. துணை பொதுச் செயலாளர் நாடாளு மன்ற உறுப்பினர் கனிமொழி. தலைமையில் தி.மு.க. விவசாய அணி செயலாளர் ஏ.கே.எஸ். விஜயன், வர்த்தகர் அணி துணை தலைவர் கோவி.செழியன், நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், மாணவர் அணி செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன், அயலக அணி செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா, மருத்துவ அணி செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் எழிலன் நாகநாதன், சென்னை மாநகர மேயர் ஆர்.பிரியா உள்ளிட்ட அறிக்கை தயாரிக்கும் குழுவினர் பங்கேற்றனர்.
கருத்து கேட்பு கூட்டத்தில் நாமக்கல் முட்டை கோழி பண் ணையாளர்கள், லாரி உரிமை யாளர்கள், பேருந்து உரிமையா ளர்கள் சங்கம், துணி ஏற்றுமதி யாளர்கள், பட்டு உற்பத்தியாளர் கள், கைத்தறி உற்பத்தியாளர்கள், தென் மண்டல எல்.பி.ஜி. டேங் கர் உரிமையாளர்கள், ட்ரெய்லர் உரிமையாளர்கள், மோட்டார் மெக்கானிக் சங்கம், பழங்குடியினர் மக்கள் சங்கம், பால் உற் பத்தியாளர் சங்கம், அரிசி உற்பத் தியாளர்கள் சங்கம், வியாபாரி கள் சங்கம், நெசவாளர் சங்கம், நூல் உற்பத்தியாளர் சங்கம், மர வள்ளி கிழங்கு விவசாயிகள் சங்கம் உட்பட பல்வேறு சங்கங் களை சார்ந்தவர்கள், பொது மக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் தங்களது கருத்துகளை மனுவாக வழங்கினர். அப்போது முக்கிய கருத்துகளை அவர்கள் நேரடியாக நிர்வாகிகளிடம் தெரிவித்தனர்.
அனைத்து கோரிக்கைகளை யும் பரிசீலித்து தேர்தல் அறிக் கையில் சேர்க்க நடவடிக்கை எடுப்பதாக குழுவினர் உறுதி அளித்தனர்.
பின்னர் கூட்டத்தில் நாடா ளுமன்ற உறுப்பினர் கனிமொழி கூறியதாவது:
தமிழ்நாடு முழுவதும் மக் களை சந்தித்து அவர்களது கருத் துகளை கேட்டு அறிந்து நேரடி யாக பெற்று தேர்தல் அறிக்கை தயாரிக்க வேண்டும் என்று எங் களுக்கு உத்தரவிடப்பட்டுள் ளது. இதில் அனைத்து தரப்பி னர் கலந்துகொண்டு கருத்து களை பகிர்வதுடன் சில முக்கிய மானவற்றை நேரடியாக எங்க ளிடம் தெரிவிக்கலாம்.
தொழில் அதிபர்கள், வியா பாரிகள், விவசாயிகளுக்கு ஒன் றிய அரசு துரோகம் செய்து வரு கிறது. வெள்ள நிவாரணம் கொடுக்க மறுத்து வருகிறது. ஒன்றிய அரசின் ஜி.எஸ்.டி.யால் தொழில் பாதிப்பு ஏற்பட்டுள் ளது. மேலும் பல குழப்பங்கள் அதில் இருக்கிறது. ஆனால் ஒன்றிய அரசு இதை கண்டு கொள்ளவில்லை. கோரிக் கையை காது கொடுத்து கேட்க வும் தயாராக இல்லை.
ஒன்றிய அரசு நாம் சொல் வதை கேட்கும் அரசாக அமைய வேண்டும். மக்களை ஒருங்கி ணைத்து அழைத்து செல்லும் அரசாக அது இருக்க வேண்டும். ஒற்றுமையான ஒன்றிய அரசாக , வேலைவாய்ப்பு உருவாக்கும் அரசாங்கமாக உரிமைகளை மதிக்கும் அரசாக இருக்க வேண்டும். மக்களையும், மொழி உணர்வையும் மதிக்கும் அரசாக உருவாக்க வேண்டும். அதன் அடிப்படையில் இந்த நாடா ளுமன்ற தேர்தலை அனைவரும் இணைந்து எதிர் கொள்ள வேண்டும். -இவ்வாறு அவர் பேசினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *