கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

1 Min Read

13.2.2024

டெக்கான் கிரானிக்கல்,சென்னை:
♦விவசாயிகளுடனான மோடி அரசின் பேச்சு வார்த்தை தோல்வி; டில்லி செல்வோம் என்ற முழக்கத்துடன் விவசாய அமைப்புகள் ஆயிரக்கணக்கான டிராக்டர்களுடன் வரும் பேரணியைத் தடுக்க கடும் தடையை ஏற்படுத்தியுள்ளது டில்லி காவல்துறை.
♦ஆளுநர் ஆர்.என்.ரவி ரிமோட் மூலம் இயக்கப் படுகிறார் என்கிறார் அமைச்சர் ரகுபதி.
♦ தமிழ்நாடு சட்டப்பேரவையில் பரபரப்பு! உரையை படிக்காமல் புறக்கணித்தார் ஆளுநர்: ஆளுநர் உரையை பேரவைத் தலைவர் வாசித்தார், தேசியகீதம் இசைக்கும் முன்பே அவையை விட்டு வெளியேறினார் ஆர்.என்.ரவி

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
♦ ‘தமிழ்நாட்டில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க முடியாது’ என என ஆளுநர் உரையில் திமுக அரசு உறுதி.
♦ ரேஷன் கடைகளில் பிரதமர் நரேந்திர மோடியின் ஒளிப்படத்தை வைக்க வேண்டும் என்ற ஒன்றிய அரசின் உத்தரவை கேரள அரசு நிராகரிப்பதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

தி டெலிகிராப்:
♦ நிதிஷ் வெளியேறினாலும் ‘இந்தியா’ கூட்டணி வலுவாக இருப்பதாகவும், தொகுதிப் பங்கீடு விரைவில் இறுதி செய்யப்படும் என்றும் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
♦ ஏழைகள் புறக்கணிப்பை எதிர்கொள்ளும் அதே வேளையில் சில தொழிலதிபர்களுக்காக அரசாங்க வளங் கள் திருப்பி விடப்படுகின்றன என்று ராகுல் கண்டனம்.

– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *