கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

viduthalai
1 Min Read

13.2.2024

டெக்கான் கிரானிக்கல்,சென்னை:
♦விவசாயிகளுடனான மோடி அரசின் பேச்சு வார்த்தை தோல்வி; டில்லி செல்வோம் என்ற முழக்கத்துடன் விவசாய அமைப்புகள் ஆயிரக்கணக்கான டிராக்டர்களுடன் வரும் பேரணியைத் தடுக்க கடும் தடையை ஏற்படுத்தியுள்ளது டில்லி காவல்துறை.
♦ஆளுநர் ஆர்.என்.ரவி ரிமோட் மூலம் இயக்கப் படுகிறார் என்கிறார் அமைச்சர் ரகுபதி.
♦ தமிழ்நாடு சட்டப்பேரவையில் பரபரப்பு! உரையை படிக்காமல் புறக்கணித்தார் ஆளுநர்: ஆளுநர் உரையை பேரவைத் தலைவர் வாசித்தார், தேசியகீதம் இசைக்கும் முன்பே அவையை விட்டு வெளியேறினார் ஆர்.என்.ரவி

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
♦ ‘தமிழ்நாட்டில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க முடியாது’ என என ஆளுநர் உரையில் திமுக அரசு உறுதி.
♦ ரேஷன் கடைகளில் பிரதமர் நரேந்திர மோடியின் ஒளிப்படத்தை வைக்க வேண்டும் என்ற ஒன்றிய அரசின் உத்தரவை கேரள அரசு நிராகரிப்பதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

தி டெலிகிராப்:
♦ நிதிஷ் வெளியேறினாலும் ‘இந்தியா’ கூட்டணி வலுவாக இருப்பதாகவும், தொகுதிப் பங்கீடு விரைவில் இறுதி செய்யப்படும் என்றும் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
♦ ஏழைகள் புறக்கணிப்பை எதிர்கொள்ளும் அதே வேளையில் சில தொழிலதிபர்களுக்காக அரசாங்க வளங் கள் திருப்பி விடப்படுகின்றன என்று ராகுல் கண்டனம்.

– குடந்தை கருணா

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *