அந்தோ பாவம் நடராஜர் கடவுள் ஆண்டாள் கோயில் குளத்தில் மீன் வலையில் சிக்கினார்

1 Min Read

விருதுநகர், அக்.8 விருதுநகர் மாவட்டம் சிறீவில்லிபுத்தூர் நகரின் மய்யப்பகுதியில் ஆண்டாள் கோவிலுக்கு சொந்தமான திருமுக்குளம் உள்ளது. மழை இல்லாததால் இந்தக் குளத்தில் தண்ணீர் குறைந்து வருகிறது.தற்போது குறைந்த அளவே உள்ள தண்ணீரில் கடந்த சில நாட்களாக மீன்பிடிக்கும் பணியில் குத்தகை எடுத்தவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 

அவ்வாறு மீன்பிடித்தபோது மீன் வலையில்  அய்ம்பொன் நடராஜர் சிலை கிடைத்தது.இதுகுறித்து உடனடியாக சிறீவில்லிபுத்தூர் நகர் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினர் விரைந்து வந்து அந்த சிலையை வருவாய்த்துறை ஆய்வாளர் மலர் பாண்டியனிடம் ஒப்படைத்தனர்.பல்வேறு பெருமையும், சிறப்பும் நிறைந்த இந்த குளத்தில் மீன்பிடி வலையில் நடராஜர் சிலை சிக்கி உள்ளதால், வேறு சிலை எதுவும் அங்கு கிடக்கிறதா? என்பது குறித்து கண்காணிக்க வருவாய்த்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *