உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு

1 Min Read

மக்களவைத் தேர்தல்
தி.மு.க. இளைஞரணி அமைப்புகளுடன் சென்னையில் 14,15ஆம் தேதிகளில் ஆலோசனைக் கூட்டம்
உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை,பிப்.12- திமுக இளைஞர் அணி மாவட்ட, மாநகர, மாநில அமைப்பாளர், துணை அமைப்பாளர் களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் வரும் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: இளைஞர் அணியின் மாவட்ட, மாநகர, மாநில அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் ஆற்றிய கழக பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட வாரியாக எனது தலை மையில் மாநில துணைச்செயலாளர்கள் முன்னிலையில் குறிஞ்சி இல்லத்தில் வரும் 14,15ஆம் தேதிகளில் நடைபெறும்.
இதில் மாவட்ட, மாநகர, மாநில அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் பராமரித்து வரும் மினிட் புத்தகம், கழக பணிகள் குறித்த பத்திரிக்கை செய்திகள், புகைப்படங்களுடன் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். மேலும் 14ஆம் தேதி மண்டலம் -1இல் மாலை 4 மணி முதல் 6 மணி வரை, மண்லடம் – 2இல் 6 மணி முதல் 8 மணி வரையும், 15ஆம் தேதி மண்லடம் – 3இல் மாலை 4 மணி முதல் 6 மணி வரையும், மண்டலம் – 4இல் மாலை 6 மணி முதல் 8 வரையும் கூட்டம் நடைபெறும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *