“உரிமைகளை மீட்போம்” : மக்களவைத் தொகுதிகளில் பிப்ரவரி 16, 17, 18 நாட்களில் பிரச்சாரக் கூட்டம் தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு

viduthalai
1 Min Read

சென்னை, பிப்.12 நாடா ளுமன்ற தேர்தலை முன் னிட்டு, கடந்த பத்தாண்டு காலத்தில் ஒன்றிய பாஜ அரசு தமிழ்நாட்டுக்கு இழைத்த அநீதிகளையும், ஒன்றிய அரசிடம் மாநிலத் தின் உரிமைகளை அடகு வைத்த அதிமுகவின் துரோ கங்களையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் வரும் 16, 17,18ஆம் தேதிகளில் நாடாளுமன்ற தொகுதி வாரி யாக திமுக சார்பில் பரப் புரைக் கூட்டம் நடைபெறும் என்று பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள் ளார்.

திமுக பொதுச் செயலா ளர் துரைமுருகன் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக அதிமுக அரசின் பத்தாண்டு கால முறையற்ற நிர்வாகம், மக்களின் குறைகள் துன்பங்களை நேரடியாகக் கேட்டறிந்திட திமுக முன் னணியினர் ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்ற பரப்புரையில் பங் கேற்று அதிமுகவை மக்கள் நிராகரிப்பதற்கான அடித் தளமிட்டனர்.

வரவிருக்கும் நாடாளு மன்றத் தேர்தல் 2024இல் கடந்த பத்தாண்டு காலத்தில் ஒன்றிய பாஜக அரசு, தமிழ் நாட்டிற்கு இழைத்த அநீதி களையும், ஒன்றிய அரசிடம் மாநிலத்தின் உரிமைகளை அடகு வைத்து தற்பொழுது நாடகமாடும் அடிமை அதி முகவின் துரோகங்களையும் மக்களிடம் கொண்டு சேர்க் கும் வகையில், முதற்கட்ட மாக, திமுக முன்னணியினர் ‘உரிமைகளை மீட்க ஸ்டாலி னின் குரல்” என்ற தலைப்பில் நாடாளுமன்றத் தொகுதி வாரியான கூட்டங்களில் பங் கேற்று சிறப்புரையாற்றவுள் ளனர்.
வருகிற 16, 17 மற்றும் 18 ஆகிய நாட்களில் நடை பெறும் பரப்புரைக் கூட்டங் களை பொறுப்பு அமைச்சர் களுடன் இணைந்து, நாடா ளுமன்றத் தொகுதிக்குட் பட்ட மாவட்ட செயலா ளர்கள் சம்பந்தப்பட்ட சட் டமன்றத் தொகுதிகளைச் சார்ந்த மாவட்ட நிர்வாகிகள், சார்பு அணியினர். பகுதி-ஒன்றிய-நகர-பேரூர் கழகச் செயலாளர்கள், கிளைச் செயலாளர்கள், பூத் கமிட்டியினர் ஆகியோர் பங்கேற்கும் பிரம்மாண்ட கூட்டங்களாக நடத்திட வேண்டும். இவ் வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *