டேக்வாண்டோ போட்டியில் பெரியார் மருந்தியல் கல்லூரி மாணவிகளுக்கு தங்கப்பதக்கம்

1 Min Read

அரசியல், தமிழ்நாடு

திருச்சி, அக். 8- திருச்சி டக்வாண்டோ கூட்டமைப்பு சார்பில் 28.09.2023 அன்று பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் நடைபெற்ற டேக்வாண்டோ போட்டியில் பெரியார் மருந்தியல் கல்லூரியின் மருத்துவ ஆய்வுக்கூட தொழில் நுட்பநர் மற்றும் மருந்தியல் பட்டயப்படிப்பு மாணவர்கள் மொத்தம் 8 பேர் கலந்து கொண்டு தனி நபர் போட்டியில் தலா 1 தங்கம் மற்றும் வெள்ளிப்பதக்கங்களையும் குழுப் போட்டியில் தலா 3 தங்கப்பதக்கங்கள் மற்றும் வெள்ளிப்பதக்கங்களையும் வென்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளனர். 

மாவட்ட அளவில் நடைபெற்ற இப் போட்டியில் தனிநபர் பிரிவில் மருந்தியல் பட்டயப்படிப்பு மாணவி செ. ஆர்த்தி தங்கப்பதக்கத்தினையும் மாணவி ச. ஆர்த்தி வெள்ளிப் பதக்கத்தினையும் வென்றனர். குழுப் போட்டியில் ஆய்வுக்கூட தொழில் நுட்பர் துறை மாணவிகள் கே. விஷ்ணுப்ரியா, ஆர்.வர்சனா மற்றும் எஸ். லலிதா ஆகியோர் கலந்து கொண்டு  தங்கப்பதக்கத்தினை பெற்றனர். மருந்தி யல் பட்டயப் படிப்பு மாணவிகள் எஸ். மாதவி, ஆர்.பி. வேதவர்சினி மற்றும் ஆய்வுக்கூட தொழில் நுட்பர் மாணவி கே. பவித்ராஆகியோர் வெள்ளிப் பதக்கத்தினை தட்டிச் சென்றனர்.

பதக்கங்கள் வென்ற மாணவிகளுக்கு கல்லூரியின் நிர்வாகத்தினர், முதல்வர் முனைவர் இரா.செந்தாமரை, பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.  

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *