திருவள்ளூர், பிப். 12- 11.2.2024 ஞாயிற் றுக்கிழமை மாலை 6 மணிக்கு திருவள்ளூர் மாவட்டம் தோணி ரேவு கிராமத்தை சேர்ந்த எஸ்.பழனி -பி.கனிமொழி ஆகியோரின் மகன் எஸ்.பி.சரத்குமார், குமார நாயக்கன் பேட்டை கிராமத்தை சேர்ந்த எஸ்.மணவாளன்–எம்.சபாஷினி ஆகியோரின் மகள்- எஸ். எம்.நர்மதா(எ) மெர்லின் ஆகியோ ரின் வாழ்க்கை இணையேற்பு விழா பொன்னேரி ஏ.எஸ்.கே. திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
வரவேற்புரையை திராவிடர் கழக பொன்னேரி நகர செயலாளர் மு.சுதாகர் வழங்கினார்.
திராவிடர் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் வழக்குரைஞர் சே.மெ. மதிவதனி இணையேற்பு விழாவிற்கு தலைமையேற்று நடத்தி வைத்தார்.
உடன் அ.இ.அ.தி.மு.க வின் மருத்துவ அணி செயலாளரும் மேனாள் நாடாளுமன்ற உறுப்பின ருமான டாக்டர்.பி.வேணுகோபால் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த் துரை வழங்கினார்.
பொன்னேரி நகர திராவிடர் கழக தலைவர் வே.அருள், திரா விடர் கழக மீஞ்சூர் ஒன்றிய செய லாளர் கே.முருகன், ஜனாதிபதி, மு.இராணி, மாவட்ட திராவிட மகளிர் பாசறை தலைவர் பொன் னேரி கு.செல்வி, மாவட்ட திரா விட மகளிர் பாசறை செயலாளர் மா.இளையராணி, க.சுகன்ராஜ், சு.எழில், கும்மங்குளம் கோபி ஆகி யோர் கலந்து கொண்டனர்.