சிறப்பாக நடத்திட தூத்துக்குடி மாவட்ட கழக கலந்துரையாடலில் முடிவு!
தூத்துக்குடி,பிப்.12- தமிழர் தலைவர் தலைமையில் 22-2-2024 அன்று மாலை குலசேகரப்பட்டினத்தில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா திராவிடர் இயக் கத்தின் சமூக நீதி முன்னோடி தொண்டறச்செம்மல் சி.டி. நாயகம் அவர்களது தொண்டுக்கு நன்றி பாராட்டு விழாக்களை சிறப்பாக நடத்துவதென தூத்துக்குடி மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 11.2.2024 அன்று மாலை ஆறு மணிக்கு மாவட்டத் தலைவர் மு.முனியசாமி தலைமையில் நடை பெற்றது.
கூட்டத்தின் நோக்கத்தை விளக்கி திராவிடர் கழக ஒருங் கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குண சேகரன் உரையாற்றினார்.
மாநகர திராவிடர்கழக தலைவர் செல்லத்துரை, பெரியார் பெருந்தொண்டர்கள் மோ.அன்பழகன், கோபால்சாமி, போஸ், பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர் மதிவாணன், மாநகர இளைஞரணி தலைவர் திரவியம் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.
நிறைவாக காப்பாளர் மா.பால் இராசேந்திரம் சிறப்பாக உரையாற் றினார்.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
திராவிடர்கழக செயலவைத் தலைவர் சுயமரியாதைச் சுடரொளி சு.அறிவுக்கரசு மறைவுக்கு இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கலை, வீர வணக் கத்தை தெரிவித்துக் கொள்கிறது.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களால் திராவிடர் கழக செயல வைத் தலைவராக நியமிக்கப்பட் டுள்ள வழக்குரைஞர் வீரமர்த்தினி அவர்களுக்கு பாராட்டைத் தெரிவித்துக் கொள்கிறது.
22-2-2024 அன்று குலசேகரப் பட்டிணத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற் றாண்டு விழா, திராவிடர் இயக்க சமூகநீதி முன்னோடி தொண்டறச்செம்மல் சி.டி.நாயகம் தொண்டிற்கு நன்றி பாராட்டுவிழா உள்ளிட்ட முப் பெரும் விழாக்களை சிறப்பாக நடத் துவது என தீர்மானிக்கப்பட்டது.
22-2-2024 அன்று தூத்துக்குடி வருகை தரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு எழுச்சிமிகு வர வேற்பு அளிப்பதென தீர்மானிக்கப்பட்டது.