கொந்தகையில் மண் கலயங்கள் கண்டெடுப்பு

1 Min Read

அரசியல்

கொந்தகை,அக்.8 – கொந்தகையில் தண்ணீர்க் குழாய் பதிக்க தோண் டப்பட்ட குழியிலிருந்து பழைமை யான கலயங்கள், மனித எலும்புகள் கண்டறியப்பட்டன.

சிவகங்கை மாவட்டம், திருப்பு வனம் அருகே உள்ள கீழடியில் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி தொடங்கப்பட்ட 9-ஆம் கட்ட அகழாய்வு கடந்த மாதம் 30-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, அருகே உள்ள கொந்த கையிலும் அகழாய்வு நடத்தப்பட்டது.

அகழாய்வில் முதுமக்கள் தாழி கள், மனித எலும்புகள் உள்பட பண்டைய தமிழர்கள் பயன்படுத் திய ஏராளமான தொன்மையான பொருள்கள் கண்டறியப்பட்டன. இந்த அகழாய்வில் கண்டறியப்பட் டப் பொருள்களை ஆவணப்படுத் தும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், கொந்தகையைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் தனது தோட்டத்தின் அருகே தண்ணீர்க் குழாய் பதிக்க குழி தோண்டினார். அப்போது, குழியிலிருந்து பல வடி வங்களில் ஏராளமான மண் கலயங்கள், மனித எலும்புகள் கண்டறியப் பட்டன. இதுகுறித்து கீழடியில் உள்ள தொல்லியல் துறையினருக்கு சுரேஷ் தகவல் தெரிவித்தார். அவர் கள் நேரடியாக வந்து இந்த மண் கலயங்களை வாங்கிச் செல்வதாகக் கூறியதாக சுரேஷ் தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *