சு-தந்திரப் போராட்ட வீரர்கள்?

viduthalai
1 Min Read

காந்தியாருக்கு எதிராக சுபாஷ் சந்திர போஸை நிறுத்த முயற்சிக்கும் ஆளுநர் ரவி வகையறாக்களுக்கு இந்தப் படம் ‘சமர்ப்பணம்.’
கோலாலம்பூரில் -தன்னை வரவேற்க வந்த மலேசிய இந்தியர்கள் – ‘‘போஸ் தவறாக எடுத்துக் கொள்வாரோ” என்ற தவறான எண்ணத்தில்- காந்தியார் படத்தை மாற்றிவிட்டு போஸ் படத்தை மாட்டியபோது, ‘‘காந்தியார்தான் நம் தேசத் தந்தை… அவர் படத்தை அகற்றியது தவறு. என் படம் கூடாது. காந்தியார் படத்தை மாட்டுங்கள், இல்லாவிட்டால் நான் இந்த சபையில் பேசமாட்டேன்!” என்ற நேதாஜி…. காந்தியார் படத்தை மீண்டும் வைக்கச் செய்து… அதன் முன்னால் அய்என்ஏ சீருடையுடன் நின்று உரையாற்றினார்.
இந்தத் தகவலை – கோலாலம்பூர் கூட்டத்தில் நேதாஜியை வரவேற்று உரையாற்றிய தமிழர் -ஜெயமணி சுப்பிரமணியன் அவர்களே, ‘கிராம ராஜ்யம்’ (29.1.1960) இதழில் பதிவு செய்திருக்கிறார்.
பொய் -நெடிய இருளை ஏற்படுத்தக் கூடும். ஆனால், உண்மை -ஒரே மின்னல்வெட்டில் இருளைக் கொன்றுவிடும்.
சுதந்திரப் போராட்டத்தில் காந்தியாரின் பங்கு என்னவென்று ஆளுநர் ‘பெருமான்’ ஆர்.என்.ரவி கேட்கிறார். நேதாஜி சுபாஷ் சந்திரபோசைத் தூக்கி வைத்து, காந்தியாரை மட்டம் தட்டும் – பிரித்தாளும் சூழ்ச்சி என்பது அவாளுக்கே உரித்தான ‘ராஜதந்திரம்!’
ஆமாம்,
ஆர்.எஸ்.எஸ். வகையறாக்கள் சுதந்திரப் போராட்டத்துக்காக செய்து கிழித்ததென்ன?
பிரிட்டிஷாரிடம் சுதந்திரப் போராட்ட வீரர்களைக் காட்டிக் கொடுத்தவர் வாஜ்பேயி – அவரே அப்படி என்றால்…. மற்றவர்கள்?

– மயிலாடன்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *