அமைந்தகரை பெரியார் பெருந்தொண்டர் எம்.டி.சுப்பிரமணியன் (வயது 81) மறைவிற்கு கழக துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் இறுதி மரியாதை

1 Min Read

திராவிடர் கழகம்

அமைந்தகரை பெரியார் பெருந்தொண்டர் எம்.டி.சுப்பிரமணியன் (வயது 81) மறைவிற்கு கழக துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் இறுதி மரியாதை செலுத்தினார். உடன் வடசென்னை மாவட்டத் தலைவர் தளபதி பாண்டியன், தென்சென்னை மாவட்ட துணை செயலாளர் அரும்பாக்கம் சா.தாமோதரன், அமைந்தகரை கழகத் தோழர்கள் தூர்காபிரகாசு, அருள்தாசு, முடிதிருத்துநர் ஏ.மோகன், வழக்குரைஞர் திவாகர், நித்தியகுமார் மற்றும் தோழர்கள் மரியாதை செலுத்தினர். மறைந்த சுப்பிரமணியன், திராவிடர் கழகம் உருவான காலத்திலிருந்து இயக்க உணர்வோடு பங்கேற்றவர். சென்னையில் தந்தைபெரியார் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் தவறாமல் பங்கேற்றவர். அவருடைய மறைவு கழகத்தோழர்களுக்கும் குடும்பத்தினருக்கும் பேரிழப்பு. அவரது உடல் இன்று (23.11.2023) சுயமரியாதை முறைப்படி கோயம்பேடு இடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *