கன்னியாகுமரி கடலில் கம்பம் அமைத்து வைக்கப்பட்டிருந்த காவிக்கொடியினை அகற்ற வலியுறுத்தி 9.2.2024 அன்று காலை 11 மணிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலத்தில் மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளர் சுப்பையாவிடம் மாவட்ட கழக தலைவர் மா.மு.சுப்பிரமணியம் தலைமையில் புகார் கொடுத்தனர். மாவட்ட செயலாளர் கோ.வெற்றிவேந்தன், மாவட்ட கழக துணைத்தலைவர் ச.நல்ல பெருமாள், மாவட்ட கழக காப்பாளர் ஞா.பிரான்சிஸ், கழக இலக்கிய அணி செயலாளர் பா.பொன்னுராசன், தொழிற்சங்க செயலாளர் ச.ச. கருணாநிதி,மாவட்ட கழக இளைஞரணி தலைவர் இரா.இராஜேஷ், கழக தோவாளை ஒன்றிய செயலாளர் ந.தமிழ் அரசன், கன்னியாகுமரி கிளைக்கழக அமைப்பாளர் க.யுவான்ஸ் கழகத்தோழர் பொன் பாண்டியன், ம.தி.முக.பொறுப்பாளர்கள் விவேகானந்தன், விஸ்வநாதன், சக்தி ஆகியோர் உடன் இருந்தனர்.
மா.மு.சுப்பிரமணியம் தலைமையில் புகார்
1 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
TAGGED:கன்னியாகுமரி
Leave a Comment
Popular Posts
10% Discount on all books