தருமபுரியில் 52 மாணவர்களுடன் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை எழுச்சியுடன் தொடங்கியது

viduthalai
1 Min Read

தருமபுரி, பிப். 11– தர்மபுரி கழக மாவட்ட திராவிடர் கழக சார்பில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை தருமபுரி பெரியார் திருமண மண்டபத்தில் இன்று (11.2.2024) நடைபெற்றது.
தொடக்க நிகழ்வாக மாவட்ட தலைவர் கு சரவணன் தலைமையேற்று உரையாற்றினார்.

திராவிடர் கழகம்

மாவட்ட செயலாளர் பெ.கோவிந்த ராஜ் அனைவரையும் வரவேற்று உரை யாற்றினார். தலைமை கழக அமைப் பாளர் ஊமை. ஜெயராமன் தொடக்க உரை யாற்றினார்.
மாநில மகளிர் அணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, காப்பாளர் அ. தமிழ்ச்செல்வன், பொதுக்குழு உறுப் பினர் கதிர், பகுத்தறிவார் கழக துணைப் பொதுச்செயலாளர் அண்ணா சரவ ணன், மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக.பொன்முடி , மாநில இளைஞ ரணி துணைச் செயலாளர் மா. செல்ல துரை, பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் கதிர்.செந்தில்குமார், நகரத் தலைவர் கரு.பாலன், பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் நா.அண்ணா துரை, விடுதலை வாசகர் வட்ட தலை வர் சின்னராசு, மாவட்டத் துணைத் தலைவர் இளைய.மாதன், பகுத்தறி வாளக் கழக பொறுப்பாளர் அன்பரசு, மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலா ளர் கே.ஆர். குமார், மேனாள் மாவட்ட தலைவர் சிவாஜி மேனாள் மாவட்ட செயலாளர் பீம.தமிழ்பிரகாரன், ஆசிரி யர் சந்தப்பட்டி சிவாஜி ஆகியோர் முன்னிலை ஏற்றனர்.

கழக மாநில ஒருங்கிணைப்பாளர் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை பொறுப்பாளர் இரா.ஜெயக்குமார் நிகழ்வை ஒருங்கிணைத்து நடத்தினார்.
பார்ப்பன பண்பாட்டு படையெடுப் புகள் என்ற தலைப்பில் கழக துணைத் தலைவர் கவிஞர்.கலி. பூங்குன்றன் வகுப்பெடுத்தார்.
ஆசிரியர் அழகிரிசாமி, முனைவர் அதிரடி. அன்பழகன், வழக்கறிஞர் கழக துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், எழுத்தாளர் வி.சி.வில்வம், ஈட்டி கணேசன் ஆகி யோர் வகுப்பெடுத்தனர்.

கல்லூரி பள்ளி மாணவர்கள் 52 பேர் மற்றும் கழகத் தோழர்கள் பங்கேற்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *