கொள்கை பரப்புரை விழாவாக நடைபெற்ற ஊடகவியலாளர் அறிவுச்செல்வன்-புஷ்பா மணவிழா!

0 Min Read

இன்று (11.2.2024) காலை 9 மணி அளவில் ஜெயங்கொண்டம் ஆரோக்கிய மகாலில் பொதுச் செயலாளர் துரை.சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்ற ச.அறிவுச்செல்வன்-சி.புஷ்பா இணையேற்பு நிகழ்வில் பொதுக்குழு உறுப்பினர் காமராஜ், மாவட்ட தலைவர் நீலமேகம், தலைமைக் கழக அமைப்பாளர் சிந்தனை செல்வன், ஒன்றிய தலைவர் கருணாநிதி, செந்துறை ஒன்றிய தலைவர் முத்தமிழ்செல்வன், ஆண்டிமடம் ஒன்றிய தலைவர் தியாக முருகன், தலைவர் புலவர் ராவணன், கழக செயலாளர் குணசேகரன், மாவட்ட துணை தலைவர் திலீபன், மீன்சுருட்டி அசோகன், சந்தானம், செந்தமிழ்ச்செல்வி, வேலுமணி, முத்தமிழ் செல்வி மற்றும் தோழர்கள் பங்கேற்றனர்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *