போக்குவரத்து தொழிலாளர்களுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை திராவிடர் தொழிலாளர் பேரவை பங்கேற்பு

2 Min Read

சென்னை, பிப். 11- தேனாம்பேட்டை தொழிலாளர் ஆனைய வளாகத்தில் போக்குவரத்துத் தொழிலா ளர்கள் சம்பந்தப்பட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை 7.2.2024 அன்று நடைபெற்றது. அதில் திராவிடர் தொழிலாளர் பேரவையின் சார்பில் பேரவைத் தலைவர் கருப்பட்டி கா.சிவகுருநாதன் கலந்து கொண்டு நமது கருத்துகளை பதிவு செய்தார்.

பெரம்பலூரில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை
அழைக்கிறது பெரம்பலூர் மாவட்ட கழகம்

பெரம்பலூர், பிப். 11- திராவிடர் கழகம் நடத்தும் பெரம்பலூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பாக ஒரு நாள் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை வருகின்ற 17.02.2024 சனிக்கிழமை காலை 9:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை பெரம் பலூர் பாலக்கரையில் உள்ள மாவட்ட திமுக அரங்கத்தில் மாவட்டத் தலைவர் சி.தங்கராசு தலைமையில் நடைபெற இருக்கிறது.
இந்த பயிற்சிப் பட்டறையில் கலந்து கொள்ள விருப்ப முள்ளவர்கள் 15 வயது முதல் 35 வயது வரை முன்னுரி மையில் 50 நபர்களுக்கு மட்டும் பாலின வேறுபாடு இன்றி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்கலாம் எனவும் இந்த பயிற்சியில் கலந்து கொள்வதற்கு முன்பதிவு செய்வது கட்டாயம் என்பதால் +918637680720, +919894893108, +919842965348 என்கிற தொடர்பு எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வகுப்புகளை நன்கு கவனித்து சிறப்பாக குறிப்பு எடுக்கும் மாணவர்களை தேர்ந்தெடுத்து பரிசுகள் வழங்கப் படும் பயிற்சியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு சான்றிதழ் கள் வழங்கப்படும் என்று கூறியுள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன், திமுக மாவட்டச் செயலாளர் குன்னம் ராஜேந் திரன், ஆசிரியர் அழகிரிசாமி, முனைவர் அதிரடி அன் பழகன், எழுத்தாளர் வில்வம், விஜேந்திரன், முனைவர் சந்திரசேகரன், வழக்குரைஞர் பிரின்சு என்னாரெசு பெரியார், ஜெயக்குமார், சிந்தனைச் செல்வன், நாத்திக பொன்முடி உட்பட திராவிடர் கழகத்தினர் பலர் பங்கேற்க உள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளனர்.

மதுரையில் தந்தை பெரியார் சிலை புதுப்பித்து பராமரித்திட கழகப் பொறுப்பாளர்களிடம் மேயர் உறுதி

மதுரை, பிப். 11- மதுரை கரிமேடு பகுதி யில் நம் கழக முன்னோடி களால் 50 ஆண்டு களுக்கு முன்பு வைக்கப் பட்ட தந்தை பெரியார் சிலையின் தலையை சட்டவிரோத விசமிகள் சேதப்படுத்தினர். சிதைந்த தலையோடு இருக்கும் சிலையை மாற்றி மார்பளவு புதிய சிலையை வைத்து மராமத்து பார்க்க மதுரை மேயர் அவர் களிடம் தலைமைக் கழக அமைப்பாளர் வே.செல்வம், மாவட்ட தலைவர் அ.முருகானந்தம், மாவட்ட செயலாளர் இராலீ. சுரேஷ், மாவட்ட துணை தலைவர் நா.முருகேசன் ஆகி யோர் கழகத் தலைவர் தமிழர்தலைவர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடந்த. கலந்துரையாடல் கூட்டத் தில் எடுக்கப்பட்ட தீர்மான நகலுடன் மனு அளித்தனர்.
அக்கோரிக்கை மனுவின் பிரதிகள் மாமன்ற உறுப் பினர்கள் மா.ஜெயராம் த.சி.நாகநாதன் ஆகியோரிடமும் வழங்கினர்.
விரைந்துநடவடிக்கை எடுப்பதாக மேயர் கழக பொறுப்பாளர்களிடம் தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *